ஆப்நகரம்

மொஹாலியில் இந்திய கொடிக்கு ‘நோ’!

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய ரசிகர்கள் தங்களது தலையில் தேசிய கொடி வரைந்து வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TOI Sports 26 Nov 2016, 10:06 am
மொஹாலி: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய ரசிகர்கள் தங்களது தலையில் தேசிய கொடி வரைந்து வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil patriotism on our sleeves but theres a no to tricolour on cricket fans head
மொஹாலியில் இந்திய கொடிக்கு ‘நோ’!


இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ‘டிரா’வில் முடிந்தது. விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி, 246 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இருஅணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் கிரிக்கெட் கட்டுப்பாட்டில் உள்ளமொஹாலி மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியை காண மைதானத்துக்கு வரும் ரசிகர்கள் தங்களது தலையில் இந்திய தேசிய கொடியை வரைந்து வரக்கூடாது என கண்டிப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் பாடி பெயிண்டிங்கிற்கு பெயர் போன சச்சின் ரசிகரான சுதிரை, பாதுகாப்பு அதிகாரிகள் முதல் கேட்டில் தடுத்து நிறுத்தினர். இவர் தனது தலைமுடியில் தேசிய கொடியின் வண்ணத்தில் பெயிண்ட் அடித்துவந்திருந்தார்.

இதுகுறித்து சுதிர் கூறுகையில்,’ இதுவரை என்னை யாரும் தடுத்தது இல்லை. அதனால் என்ன நடக்கிறது என தெரிந்து கொள்ள முடியவில்லை. ராஜ்கோட், விசாகப்பட்டின போட்டிகளின் போதும் இப்படி தான் சென்றேன். அங்கு யாரும் தடுக்கவில்லை. இதை இந்திய அணியின் பாதுகாப்பு அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன். அவர் நிச்சயம் உதவுவதாக தெரிவித்துள்ளார்.’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்