ஆப்நகரம்

நீ வா ராயுடு, இத்துப்போன ”தோனி”யே இருக்கும் போது உனக்கென்ன -கேவலப்படுத்திய யுவராஜ் சிங் தந்தை!

தோனியை சுட்டிக் காட்டி, ராயுடுவை மீண்டும் விளையாட வருமாறு யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் வலியுறுத்தி உள்ளார்.

Samayam Tamil 10 Jul 2019, 5:04 pm
கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரின் ஹீரோ யுவராஜ் சிங். இந்திய கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத ஒரு நபர் ஆவார். இவரது தந்தை யோக்ராஜ் சிங், தோனியை அடிக்கடி வம்புக்கு இழுக்கக் கூடியவர்.
Samayam Tamil Dhoni


அந்த வகையில் தற்போது மீண்டும் தோனியை சீண்டியுள்ளார். அதாவது, உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் விளையாட அம்பதி ராயுடுவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

தவான், விஜய் சங்கர் ஆகியோர் காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் விலகினர். அவர்களுக்கு பதிலாக ரிஷப் பண்ட், மாயங்க் அகர்வால் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். அப்போதும் அம்பதி ராயுடுவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதனால் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும், தான் ஓய்வு பெறப் போவதாக அறிவித்திருந்தார். இந்த சூழலில் ”தோனி போன்ற அசிங்கம் பிடித்த நபர்களே இருக்கும் போது, நீ எதற்காக ஓய்வு பெற்றாய்.

ஓய்வு முடிவை தூக்கி எறிந்து விட்டு, மீண்டும் இந்திய அணிக்கு விளையாட வா” என்று யோக்ராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், ராயுடு விளையாட நிறைய இருக்கிறது.

ரஞ்சி டிராபி, ஈரானி டிராபி, துலீப் டிராபி போன்றவற்றில் 100, 200, 300 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். அவருக்காக கிரிக்கெட் காத்துக் கொண்டிருக்கிறது என்று யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார். இது தோனி ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்