ஆப்நகரம்

கனவாவே போன சாம்பியன்ஸ் டிராபி: கோலி, யுவராஜ், அஸ்வின் ஆகியோரின் உருவப்படம் எரிப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில் தோற்ற இந்திய அணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கான்பூரில் ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

TNN 19 Jun 2017, 8:15 am
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில் தோற்ற இந்திய அணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கான்பூரில் ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil people protest in kanpur as india lose to pakistan in the champions trophy final
கனவாவே போன சாம்பியன்ஸ் டிராபி: கோலி, யுவராஜ், அஸ்வின் ஆகியோரின் உருவப்படம் எரிப்பு


இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடந்தது. இதில், லண்டனில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி தன்னுடைய பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய அதிரடி பாகிஸ்தான் 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்தது. பின்னர் இமாலய இலக்கை துரத்திர இந்திய அணியின் சொதப்பலால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்து 180 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.


People protest in Kanpur as India lose to Pakistan in the Champions Trophy Final #CT17 #INDvPAK pic.twitter.com/jyIAJZV5TK — ANI UP (@ANINewsUP) June 18, 2017 இந்திய அணி வீரர்கள் என்னமோ தோல்வியை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள், ஆனால், இந்த தோல்வியை ரசிகர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்திய அணியின் இந்த தோல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் கான்பூரில் ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கோலி, யுவராஜ், அஸ்வின் உள்பட இந்திய வீரர்களின் உருவப்படங்களை தீயில் எரித்தனர்.

People protest in Kanpur as India lose to Pakistan in the Champions Trophy Final

அடுத்த செய்தி

டிரெண்டிங்