ஆப்நகரம்

மவுனமாக துவங்கிய இந்தியா-பாக்., மோதல்!

லண்டனில் நடந்த தாக்குதலில் உயிர்விட்டவர்களுக்காக, இந்தியா, பாகிஸ்தான் போட்டி துவங்கும் முன் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் மவுன அஞ்சலி செலுத்தினர்.

TOI Sports 4 Jun 2017, 3:05 pm
பர்மிங்ஹாம்: லண்டனில் நடந்த தாக்குதலில் உயிர்விட்டவர்களுக்காக, இந்தியா, பாகிஸ்தான் போட்டி துவங்கும் முன் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் மவுன அஞ்சலி செலுத்தினர்.
Samayam Tamil players tribute for terror atttack in london
மவுனமாக துவங்கிய இந்தியா-பாக்., மோதல்!


இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று துவங்கியது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகளும் பங்கேற்கின்றன.

இதில் பர்மிங்ஹாமில் நடக்கும் ‘பி’ பிரிவு நான்காவது லீக் போட்டியில், இந்தியா அணி, தனது பரமஎதிரியான பாகிஸ்தான் அணியை எதிர் கொள்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பிராஜ் அஹமது , முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.


மவுன அஞ்சலி:
இந்நிலையில், லண்டனில் நேற்று நடந்த தீவிரவாத தாக்குதலில், உயிரிழந்தவர்களுக்கும், படுகாயமடைந்தவர்களுக்கும், போட்டி துவங்கும் முன் வீரர்கள், ரசிகர்கள் என ஒட்டுமொத்த மைதானமே மவுன அஞ்சலி செலுத்தியது.

players tribute for terror atttack in london

அடுத்த செய்தி

டிரெண்டிங்