ஆப்நகரம்

இந்திய அணி வெற்றிக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 22 Aug 2018, 4:40 pm
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil sdfbfg


இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இத்தொடரின் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து அணி வென்ற இந்நிலையில் மூன்றாவது போட்டி நாட்டிங்காமில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது.

இதில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதல் இரண்டு போட்டிகளில் சந்தித்த தோல்வியிலிருந்தும் மீண்டு வந்துள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இத்தொடர் சுவாரஸ்யமான கட்டத்தை நிலையில் உள்ளது. தொடரின் 4வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி சவுத்தாம்ப்டன் நகரின் ரோஸ் பவுல் மைதானத்தில் தொடங்கும்.
இந்நிலையில், இந்திய அணிக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் எழுதியுள்ள பதவில், “ட்ரெண்ட் பிரிட்ஜில் வெற்றி இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணிக்கு வாழ்த்துகள். இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளதால் தொடரை வெல்லும் வாய்ப்பு உள்ளது. முயலுங்கள், விராட் கோலி” எனக் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்