ஆப்நகரம்

பிரித்வி ஷா ‘2.0’... இரட்டை சதம் அடித்து மிரட்டல் ரீஎண்ட்ரி!

வதோதரா: பரோடா அணிக்கு எதிரான ரஞ்சிக்கோப்பை பி பிரிவு போட்டியில் மும்பை அணியின் பிரித்வி ஷா இரட்டை சதம் அடித்து மிரட்டினார்.

Samayam Tamil 11 Dec 2019, 6:27 pm
இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக்கோப்பை தொடர் தற்போது நடக்கிறது. இதில் வதோதராவில் நடக்கும் பி பிரிவு லீக் போட்டியில் மும்பை, பரோடா அணிகல் மோதுகின்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
Samayam Tamil Prithvi Shaw


மும்பை 431
இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி முதல் இன்னிங்சில் 431 ரன்கள் எடுத்தது. பரோடா அணி முதல் இன்னின்சில் 307 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் பிரித்வி ஷா இரட்டை சதம் விளாச, மும்பை அணி 4 விக்கெட்டுக்கு 409 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது.

இமாலய இலக்கு
இதையடுத்து பரோடா அணிக்கு மும்பை அணி 534 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. இதன் பின் களமிறங்கிய பரோடா அணி மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 74 ரன்கள் எடுத்துள்ளது. நாளை கடைசி நாள் ஆட்டம் என்பதால் மும்பை அணி எஞ்சியுள்ள பரோடாவின் 7 விக்கெட்டையும் விரைவாக கைப்பற்றி வெற்றிக்கு முயற்சிக்கும்.

8 மாத தடை
முன்னதாக பிரித்வி ஷாவுக்கு ஊக்கமருந்து சர்ச்சை காரணமாக 8 மாதம் தடைவிதிக்கப்பட்டது. இந்திய அணிக்காக அறிமுகமான பிரித்வி ஷா தனது அறிமுக டெஸ்டில் அசத்தல் சதம் விளாசி முத்திரையுடன் கிரிக்கெட் பயணத்தை துவங்கினார். ஆனால் ஊக்கமருந்து சர்ச்சை பிரித்வீ ஷாவை ஓரங்கட்டியது. தற்போது ரோஹித் ஷர்மா, மாயங்க் அகர்வால் நல்ல பார்மில் உள்ளதால் பிரித்வி ஷா அணிக்கு திரும்புவது கடினமான விஷயம் தான்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்