ஆப்நகரம்

மகளிர் கிரிக்கெட் கேப்டனின் டிஎஸ்பி பதவி பறிப்பு

போலிச்சான்றிதழ் காரணமாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு வழங்கப்பட்ட டிஎஸ்பி பதவியை ரத்து செய்ய பஞ்சாப் அரசு முடிவுசெய்துள்ளது.

Samayam Tamil 10 Jul 2018, 8:43 am
போலிச்சான்றிதழ் காரணமாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு வழங்கப்பட்ட டிஎஸ்பி பதவியை ரத்து செய்ய பஞ்சாப் அரசு முடிவுசெய்துள்ளது.
Samayam Tamil 64924781


இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் டி20 போட்டிகளுக்கான கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர். இவருக்கு பஞ்சாப் அரசு காவல்துறையில் டிஎஸ்பி பதவி வழங்கியது.

அவர் இந்தப் பணியில் சேரந்த போது சமர்ப்பித்த பட்டப்படிப்புச் சான்றிதழ் போலியானது என்று காவல்துறை விசாரணையில் உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அவரது பதவியை ரத்து செய்துள்ளது பஞ்சாப் அரசு.

கடந்த மார்ச் 1ஆம் தேதி போலீஸ் டிஎஸ்பி பதவியில் இணைந்த ஹர்மன்ப்ரீத், மீரட்டில் உள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகம் வழங்கிய பட்டப்படிப்புச் சான்றிதழைச் சமர்ப்பித்திருக்கிறார். அது போலியானது என்று போலீசார் விசாரணையில் தெரிந்துள்ளது.

எனவே, அவர் 12ஆம் வகுப்பு வரை மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிறார் என்பதால் டிஎஸ்பி பதவியில் நீட்டிக்க முடியாது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்