ஆப்நகரம்

ஓய்வு கொடுத்தாலும் ஓயாமல் உழைக்கும் அஷ்வின், ஜடேஜா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட அந்திய வீரர்கள் ரஞ்சி கோப்பையில் களமிறங்க உள்ளனர்.

TNN 1 Oct 2017, 5:06 am
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட அந்திய வீரர்கள் ரஞ்சி கோப்பையில் களமிறங்க உள்ளனர்.
Samayam Tamil r ashwin ravindra jadeja likely to play in ranji trophy opener
ஓய்வு கொடுத்தாலும் ஓயாமல் உழைக்கும் அஷ்வின், ஜடேஜா


இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த இரு தொடர்களிலும் இந்திய சுழல் சிங்கங்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஓய்வு என்ற பெயரில் ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையிலும் அவர்கள் இருவரும் ஓயாமல் விளையாடி வருகின்றனர். அஸ்வின் இங்கிலாந்தில் நடைபெற்ற உள்நாட்டுப் போட்டியில் முதல் முறையாக பங்கேற்று அசத்தினார். ஜடேஜாவும் தொடர்ந்து வாய்ப்பை எதிர்நோக்கி பயிற்சி எடுத்து வருகிறார்.

இந்நிலையில் வரும் 6ம் தேதி தொடங்கும் ரஞ்சி கோப்பை தொடரில் இருவரும் களமிறங்க உள்ளனர். புஜாரா தலைமையிலான சௌராஷட்டிர அணியில் ரவீந்திர ஜடேஜா விளையாட உள்ளார். ரவிச்சந்திரன் அஷ்வின் தமிழக அணியில் விளையாடுவார். இந்த அணியில் இந்திய அணி வாய்ப்புக்குக் காத்திருக்கும் மற்றொரு வீரரான முரளி விஜய்யும் இணைகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்