ஆப்நகரம்

இந்திய அணியின் ரஷித் கான் இவர்தான்…இளம் பௌலருக்கு அங்கிகாரம் கொடுக்கும் ஆகாஷ் சோப்ரா!

இந்தியா ஸ்பின்னர் ஒருவர் ரஷித் கான் போன்று பந்துவீசுகிறார் என ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார்.

Samayam Tamil 1 Aug 2021, 2:43 pm
இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்ட, ஐபிஎலில் சிறப்பாக சோபித்த இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணி, சிறப்பாகச் செயல்பட்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
Samayam Tamil ஆகாஷ் சோப்ரா


அதன்பிறகு நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாகச் செயல்பட்டு 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. அடுத்து, இரண்டாவது போட்டிக்கு முன்னதாக இந்திய வீரர் க்ருனால் பாண்டியாவுக்கு கொரோனா உறுதியானது. இதனால், அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இவருடன் சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா போன்ற 8 முக்கிய இந்திய வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்கள் கடைசி இரண்டு டி20 போட்டிகளில் பங்கேற்வில்லை. இதனால், கடைசி இரண்டு போட்டிகளில் இந்திய அணி 5 பேட்ஸ்மேன்கள், 6 பௌலர்களுடன் களமிறங்கியது.

ராகுல் சஹார் அபாரம்:

கடைசி இரண்டு போட்டிகளில் களமிறங்க ருதுராஜ், படிக்கல், சாம்சன் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இவர்கள் யாரும் சிறப்பாக சோபிக்கவில்லை. இதனால் இந்திய அணி படுதோல்வியைச் சந்தித்தது. இருப்பினும், ஸ்பின்னர் ராகுல் சஹார் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இலங்கை பௌலர்ளை தணறடித்து, தனது திறமையை நிரூபித்துள்ளார். இவரை பலரும் பாராட்டி பேசி வருகின்றனர்.

இந்தநிலையில், நடந்து முடிந்த இந்தியா இலங்கை இடையேயான கிரிக்கெட் தொடர் குறித்துப் பேட்டிகொடுத்துள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ராகுல் சாஹரை வெகுவாக பாராட்டியும் பேசியுள்ளார்.

தனியார் பத்திரிக்கை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்த ஆகாஷ் சோப்ரா, “ராகுல் சாஹருக்கு இந்திய அணியில் நிரந்தர இடம் கிடையாது. யுஸ்வேந்திர சாஹல், ஜடேஜா, வாசிங்டன் சுந்தர் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் தான் ராகுல் சாஹருக்கு இடம் கிடைக்கவில்லை. வருண் சக்கரவர்த்தியும் இந்திய அணியில் தனக்கான நிரந்தர இடத்தை பிடிக்கக் காத்துள்ளார். அதேபோல், ராகுல் சாஹரும் தனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் மிக சரியாக பயன்படுத்தி வருகிறார். ராகுல் சாஹரின் பந்துவீச்சில் ஒரு தனித்துவம் உள்ளது. தனது மாயாஜால சுழலால் பேட்ஸ்மேன்களை குழப்பமடைய செய்யும் ஆற்றல் இவரிடம் உள்ளது. இவரை இந்திய அணியின் ரசீத் கான் என்று கூட சொல்லலாம். எதிர்வரும் ஐபிஎல் 14ஆவது சீசனில் எஞ்சிய போட்டிகளில் இவர், சிறப்பாக விளையாடிவிட்டால், டி20 உலகக்கோப்பையில் நிச்சயம் இடம் கிடைக்கும்” என தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்