ஆப்நகரம்

தன்னுடன் பணியாற்றியவர்களுக்காக ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த ராகுல் டிராவிட்!!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்றதற்காக, ராகுல் டிராவிட் உள்ளிட்ட அணி நிர்வாகத்தினர் அனைவருக்கும் ரூ.25 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது

Samayam Tamil 26 Feb 2018, 5:53 am
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்றதற்காக, ராகுல் டிராவிட் உள்ளிட்ட அணி நிர்வாகத்தினர் அனைவருக்கும் ரூ.25 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil rahuldravid s demand for parity in the cash rewards announced by the bcci after the india u 19 team clinched the u19cwc has been accepted by the indian board
தன்னுடன் பணியாற்றியவர்களுக்காக ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த ராகுல் டிராவிட்!!


நியூசிலாந்தில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. இதையடுத்து வெற்றி பெற்ற இந்திய அணி பயிற்சி ஆலோசகர் டிராவிட்டுக்கு ரூ. 50 லட்சம், அணி வீரர்களுக்கு ரூ. 30 லட்சம், அணியின் பவுலிங், பீல்டிங் கோச், பிசியோதெரபி மருத்துவர் என ஆதரவு ஊழியர்களுக்கு ரூ. 20 லட்சம் பரிசுத் தொகையை பிசிசிஐ அறிவித்தது.

இதனையடுத்து, தனக்கு மட்டும் ரூ. 50 லட்சம் கொடுத்தது ஏற்றுக் கொள்ள முடியாது. வெற்றிக்காக உழைத்த அணியின் நிர்வாகத்தினர் அனைவருக்கும் பரிசுத் தொகை கொடுக்க வேண்டும் என ராகுல் டிராவிட் கூறினார். இதற்காக தனது பரிசுத் தொகையையும் விட்டுத்தருவதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, ராகுல் டிராவிட்டின் கோரிக்கையை ஏற்று, ராகுல் டிராவிட் உள்ளிட்ட அணி நிர்வாகத்தினர் அனைவருக்கும் தலா 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தன்னுடன் பணியாற்றியவர்களுக்காக தனது 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை விட்டுக்கொடுத்திருப்பது ஆச்சர்யமளிப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்நிலையில், ராகுல் டிராவிட்டின் பெருந்தன்மை குறித்து அனைவரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்