இந்தியா, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி வருகிற ஜூன் 18 முதல் 22ஆம் தேதிவரை இங்கிலாந்து சௌதாம்ப்டான் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணிக் கேப்டன் விராட் கோலிக்கு அறிவுரை வழங்கும் வகையில் அவரது சிறு வயது கோச் ராஜ் குமார் ஷர்மா பேசியுள்ளார் தனியார் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள அவர், “விராட் கோலிக்கு தான் எங்குத் தவறு செய்கிறோம் என்ற விஷயம் நன்றாகத் தெரியும். நியூசிலாந்து அணி முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீ நல்லமுறையில் ஸ்விங் செய்யக் கூடியவர். இவருக்கு எதிராக அவுட் சைட் ஆஃப் ஸ்டெம்பில் அடித்து விளையாடக் கூடாது. அந்த பந்தினை விட்டுவிட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
“சௌதீ வீசும் லென்த்தை வைத்து பந்தைத் தொடலாமா? வேண்டாமா? என்பதைக் கோலி சரியாகக் கணிக்க வேண்டும். கோலி, சௌதீ இருவரும் அன்டர் 19 கிரிக்கெட்டிலிருந்து எதிர் எதிரே விளையாடி வருகின்றனர். இதனால் கோலியின் பலம், பலவீனம் சௌதீக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். அன்டர் 19 கிரிக்கெட் தொடர்களின்போதே கோலிக்கு எதிராக சௌதீ நல்ல முறையில் வியூகம் அமைப்பார். கோலிக்கு கவர் டிரைவ் பிடித்தமான ஒன்று. அப்படிக் கவர் டிரைவ் ஆடும்போது பந்து ஸ்விங் ஆகும் பட்சத்தில் ஸ்லிப்பில் கேட்ச் ஆக அதிக வாய்ப்புள்ளது. எனவே சௌதீ வீசும் பந்தில் கோலி கவர் டிரைவ் அடிக்கும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். சௌதீக்கு எதிராக கோலி 10 முறை அவுட் ஆகியுள்ளார். இதனால் சௌதீ விஷயத்தில் கோலி மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்” எனக் கூறினார்.
“சௌதீ வீசும் லென்த்தை வைத்து பந்தைத் தொடலாமா? வேண்டாமா? என்பதைக் கோலி சரியாகக் கணிக்க வேண்டும். கோலி, சௌதீ இருவரும் அன்டர் 19 கிரிக்கெட்டிலிருந்து எதிர் எதிரே விளையாடி வருகின்றனர். இதனால் கோலியின் பலம், பலவீனம் சௌதீக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். அன்டர் 19 கிரிக்கெட் தொடர்களின்போதே கோலிக்கு எதிராக சௌதீ நல்ல முறையில் வியூகம் அமைப்பார். கோலிக்கு கவர் டிரைவ் பிடித்தமான ஒன்று. அப்படிக் கவர் டிரைவ் ஆடும்போது பந்து ஸ்விங் ஆகும் பட்சத்தில் ஸ்லிப்பில் கேட்ச் ஆக அதிக வாய்ப்புள்ளது. எனவே சௌதீ வீசும் பந்தில் கோலி கவர் டிரைவ் அடிக்கும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். சௌதீக்கு எதிராக கோலி 10 முறை அவுட் ஆகியுள்ளார். இதனால் சௌதீ விஷயத்தில் கோலி மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்” எனக் கூறினார்.