ஆப்நகரம்

சூரிய கிரகணம் காரணமாக தாமதமாக துவங்கும் ரஞ்சிக்கோப்பை போட்டிகள்!

மும்பை: சூரிய கிரகணம் காரணமாக மும்பை மற்றும் ராஜ்கோட்டில் நடக்கும் ரஞ்சிக்கோப்பை போட்டிகள் இரண்டு மணி நேரம் தாமதமாக துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Dec 2019, 7:51 pm
இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. இதன் லீக் போட்டிகள் இன்று துவங்கியது. இந்நிலையில் இதன் இரண்டாவது நாள் ஆட்டம் சூரிய கிரகணம் காரணமாக வழக்கமான நேரத்தை விட தாமதமாக துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Ranji Trophy


சூரிய கிரகணம்
பூமியின் மீது விழும் சூரிய ஒளியை நிலவு மறைக்கும் சூரிய கிரகணம் நாளை நிகழவுள்ளது. இதனால் ரஞ்சிக் கோப்பையின் நாளைய இரண்டாவது நாள் ஆட்டம் வழக்கமாக நேரமான 9.30 மணிக்கு பதிலாக இரண்டு மணி நேரம் தாமதமாக துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை மற்றும் ராஜ்கோட்டில் நடக்கும் போட்டிகள் மட்டும் இந்த தகவலை உறுதி செய்துள்ளது.

எஸ்.சி.ஏ அறிக்கை
இதுதொடர்பாக சவுராஸ்டிரா கிரிக்கெட் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “சூரிய கிரகணம் காரணமாக நாளைய போட்டி 11.30 மணிக்கு துவங்கும்.” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்கோட்டில் நடக்கும் உத்தரபிரதேச அணிக்கு எதிரான போட்டியில் சவுராஸ்டிரா அணி 8 விக்கெட்டுக்கு 322 ரன்கள் எடுத்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்