ஆப்நகரம்

மறுபடியும் மொதல்ல இருந்தா..... பயிற்சியாளராக நீடிக்கிறாரா ரவி சாஸ்திரி!

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியே தொடர்வார் என தெரிகிறது.

Samayam Tamil 1 Aug 2019, 2:56 pm
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. இங்கிலாந்தில் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் இவரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இவருடன் சேர்த்து பேட்டிங், பவுலிங், பிஸியோ என அனைத்துவிதமான பொறுப்புக்கும் பலரும் விண்ணப்பித்துள்ளனர்.
Samayam Tamil ravi sashtri


ஜெயவர்த்னா இல்லை:
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு முன்னாள் இலங்கை கேப்டன் மகிளா ஜெயவர்தனாவின் பெயர் அடிபட்டது. ஆனால் அவருக்கு இதில் பெரிய அளவில் விருப்பம் உள்ளதாக தெரியவில்லை.

ஜெயவர்தனா தற்போது ஐபிஎல்., தொடரில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்துள்ளார். அதில் அவர் தொடர்வார் என தெரிகிறது.

அதிக வெற்றி:
இதற்கிடையில் ரவி சாஸ்திரி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி 70% வீதத்துக்கு மேலான வெற்றிகளை பெற்றுள்ளது. அதில் வரலாற்று சிறப்பு மிக்க ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றி, இரண்டு ஆசிய கோப்பை, உலகக்கோப்பை அரையிறுதி என சிறப்பாகவே செயல்பட்டுள்ளது.


அடுத்த உலகக்கோப்பை:
இதனால், அடுத்த ஆண்டு உலகக்கோப்பை (டி-20, ஆஸ்திரேலியா), 2021 20 ஓவர் உலகக்கோப்பை (இந்தியா), டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தொடர்வார் என தெரிகிறது.

இவருடன் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண், மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் ஒப்பந்தமும் நீடிக்கப்படும் என்றும் தெரிகிறது. ஆனால் பேட்டிங் பயிற்சியாளர் பரத் அருண் நீக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்