ஆப்நகரம்

தோனி, யுவராஜ் தேவையா? இல்லையா? வந்தவுடன் வேலையை ஆரம்பித்த ரவிசாஸ்திரி

இந்திய அணியின் மூத்த வீரர்களான தோனி, யுவராஜ் சிங் எந்த வகையில் உலகக் கோப்பை கிரிக்கெட் 2019ன் போது உதவுவார்கள் என கேப்டன் கோலியுடன், பயிற்சியாளர் ரவிசாஸ்திரி போனில் பேசியுள்ளார்.

TOI Sports 15 Jul 2017, 12:04 pm
இந்திய அணியின் மூத்த வீரர்களான தோனி, யுவராஜ் சிங் எந்த வகையில் உலகக் கோப்பை கிரிக்கெட் 2019ன் போது உதவுவார்கள் என கேப்டன் கோலியுடன், பயிற்சியாளர் ரவிசாஸ்திரி போனில் பேசியுள்ளார்.
Samayam Tamil ravi shastri to speak to virat kohli about ms dhoni yuvraj singhs team india future
தோனி, யுவராஜ் தேவையா? இல்லையா? வந்தவுடன் வேலையை ஆரம்பித்த ரவிசாஸ்திரி


தோனி, யுவராஜ்:
இந்திய அணி 2011ல் உலகக் கோப்பை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தவர்கள் தோனி,யுவராஜ் சிங். தோனி தன் சிறப்பான கேப்டன்ஷிப் இந்திய அணியை வழிப்படுத்த, யுவராஜ் தன் அதிரடியால் ரன்குவித்து, தொடர் நாயகன் விருது பெற இந்தியாவின் உலகக் கோப்பை கனவு மறுபடியும் நினைவானது.

ஆனால் தற்போது இவர்களின் ஆட்டம் அவ்வளவாக திருப்திகரமாக இல்லை என ரவி சாஸ்திரி, கோலி கருதுகின்றனர் போல. அதனால், இவர்களின் பங்கு 2019 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் லட்சியத்தை எப்படி வலுவாக்கும் அல்லது பிரச்னையாக இருக்கும் என்ற விவாதம் கிளம்பியுள்ளது.



இந்நிலையில் புதிதாக தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுள்ள ரவி சாஸ்திரி, வரும் போட்டித்தொடர்களில் தோனி, யுவராஜ் ஆகியோரின் பங்கு எப்படி இருக்கும் என்பதை கோலியுடன் பேசியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. முன்பு இந்த வீரர்கள் எப்படி செயல்பட்டனர் என்பதை விடுத்து, இனி இந்திய அணிக்கு இவர்கள் எப்படி மேம்படுத்துவர் என்பதை சிந்திக்க வேண்டிய காலம் இது என்று தெரிவித்துள்ளார்.

இதனால் தோனி, யுவராஜ் ஆகியோர் மீது வந்த உடனே கண் வைத்துள்ளார் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

Both Dhoni and Yuvraj are in their mid thirties and have played a crucial role in India's limited-overs cricket in past, but their recent forms have been a matter of concern.

அடுத்த செய்தி

டிரெண்டிங்