ஆப்நகரம்

India vs Australia: மதிக்கலையா.. பாக்கலையா? : ரோகித்தை கண்டுகொள்ளாத அஸ்வின்

பின்ச் விக்கெட் வீழ்த்திய அஸ்வினை பாராட்ட வந்த ரோகித் சர்மாவை கண்டுகொள்ளாமல் சென்றது விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

Samayam Tamil 10 Dec 2018, 12:06 am
ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. 3 டி20 போட்டி தொடர் இந்தியா, ஆஸ்திரேலியா 1-1 வென்றதால் என சமனில் முடிந்தது.
Samayam Tamil rohit sharma


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இறுடி நாளில் இந்தியா வெற்றி பெற இன்னும் 6 விக்கெட்டுகளை 218 ரன்களுக்குள் வீழ்த்த வேண்டும் என்ற நிலை உள்ளது.

அஸ்வின் அபாரம் :
முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், 2வது இன்னிங்ஸில் பின்ச், கவாஜா வீழ்த்தி அசத்தியுள்ளர்.

ரோகித்தை கண்டு கொள்ளாத அஸ்வின்:
4வது நாள் ஆட்டத்தின் போது பின்ச் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். அதன் பின்னர் உடனே தேநீர் இடைவேளை விடப்பட்டது. இதனால் பெவிலியன் நோக்கி வீரர்கள் திரும்பினர்.
பின்ச் விக்கெட்டை வீழ்த்திய அஸ்வினுக்கு சக வீரர்கள் கை கொடுத்தும், முதுகில் தட்டியும் பாராட்டினர்.

இந்நிலையில் அஸ்வினை பாராட்ட அவர் பின்னால் சென்ற ரோகித் சர்மா அஸ்வினுக்கு கை கொடுக்க நில நொடிகள் கையை நீட்டியபடியே அஸ்வின் அருகில் சென்றார். ஆனால் அதை அஸ்வின் கண்டுகொள்ளாமல் செல்லவே, அவரின் முதுகில் தட்டி ரோகித் சர்மா பாராட்டினார்.


அஸ்வின் கவனிக்காததற்கு, ரோகித் பின்னால் தொடர்ந்து வந்ததாலும், அதே சமயம் அஸ்வின் வேறு யாரிடமோ பேசிக் கொண்டே சென்றதால் கவனிக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்