ஆப்நகரம்

சாதிக்க துடித்த கோலிக்கு தடையாக வந்த வருண பகவான்

பெங்களூருவில் இன்று நடக்கயிருந்த 29வது ஐபிஎல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

TNN 26 Apr 2017, 12:37 am
பெங்களூருவில் இன்று நடக்கயிருந்த 29வது ஐபிஎல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
Samayam Tamil rcb srh tie abandonded due to rain
சாதிக்க துடித்த கோலிக்கு தடையாக வந்த வருண பகவான்


இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர், 10வது ஆண்டாக வெற்றிகரமாக துவங்கி நடந்து வருகிறது. இதில் பெங்களூருவில் நடக்கும் 29வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதயிருந்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

இந்நிலையில், போட்டியை நடத்தவிடாமல் தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. அதோடு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இதன் மூலம் 8 போட்டியில் பங்கேற்ற பெங்களூரு அணி 2ல் வெற்றியும், 5ல் தோல்வியும், அடைந்து 5 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் படுதோல்வியை தழுவிய பெங்களூரு அணி இந்தப் போட்டியில் தக்க பதிலடி கொடுத்து சாதிக்க நினைத்த கோலி அணிக்கு வருண பகவான் தடையாக அமைந்துவிட்டது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்:

இதே போல், 8 போட்டியில் பங்கேற்ற ஹைதராபாத் அணி 4ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்து 9 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

10வது ஐபிஎல் தொடரில் முதல் முறை:

இந்த சீசனில் ஒரு போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

The inevitable has happened. The match has been abandoned and both teams will share a point each.

அடுத்த செய்தி

டிரெண்டிங்