ஆப்நகரம்

இது என்னடா இந்திய டீமுக்கு வந்த சோதனை... 2003, 2019... இப்போ இவங்களா?

தென் ஆப்ரிக்காவில் நடந்த 19 உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி சில சொதப்பல்கள் காரணமாக வங்கதேச அணியிடன் தோல்வியடைந்தது.

Samayam Tamil 10 Feb 2020, 7:41 pm
தென் ஆப்ரிக்காவில் நடந்த 19 உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி சில சொதப்பல்கள் காரணமாக வங்கதேச அணியிடன் தோல்வியடைந்தது. தென் ஆப்ரிக்காவில் 19 வயதுக்கு உட்படோருக்கான 13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. இதன் ஃபைனலில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. இதில் வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பை வென்று வரலாறு படைத்தது. இப்போட்டியில் இரு அணி வீரர்களும் களத்தில் வெறித்தனமாக காணப்பட்டனர்.
Samayam Tamil reasons for team india lost to bangladesh in u 19 world cup final
இது என்னடா இந்திய டீமுக்கு வந்த சோதனை... 2003, 2019... இப்போ இவங்களா?



என்ன காரணம்

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி, தோல்வியே சந்திக்காமல் தொடர் வெற்றிகள் மூலம் ஃபைனலுக்கு முன்னேறியது. ஆனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதை சரியாக பயன்படுத்தி அதிக ரன்கள் சேர்க்க இந்திய பேட்ஸ்மேன்கள் தவறினர். இதற்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியது மிக முக்கிய காரணமாக அமைந்தது.

கூடுதல் எக்ஸ்டிராஸ்

பேட்டிங்கில் போதுமான அளவு ரன்கள் சேர்க்காத நிலையில் வங்கதேச அணி எட்ட வேண்டிய இலக்கில் சுமார் 19.41 சதவீத ரன்களை கூடுதல் ரன்களாக இந்திய பவுலர்களே வாரி வழங்கினர். இதில் 2 நோ-பால், 19 வைடுகள் என தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

சோபிக்காத பந்துவீச்சு

இதே போல குறைந்தபட்ச ஸ்கோரை தடுக்கும் முயற்சியில் இந்திய அணி இருந்த நிலையில், பவுலர்களை சரியான வரிசையில் பந்துவீசாததும் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. ஒருபுறம் பிஸ்னோ ஒவ்வொரு பந்துக்கும் விக்கெட் கைப்பற்றும் அளவு பவுலிங்கில் மிரட்ட, மறுபுறம் அடுத்த பவுலர்கள் எளிதாக ரன்களை விட்டுக்கொடுத்தனர்.

சீனியர்கள் போல

இந்திய அணியின் இந்த சொதப்பல் தோல்வி, கடந்த 2003இல் நடந்த உலகக் கோப்பை ஃபைனல் தோல்வி, வீழ்த்தவே முடியாத அணி என கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் வெளியேறிய இந்திய அணியை நினைவுபடுத்தும் விதத்தில் உள்ளது. இந்த தோல்விகள் உலகக் கோப்பை தொடரின் மிகவும் முக்கியமான போட்டிகளில், 100 சதவீதம் வெறித்தனத்தை வெளிப்படுத்தும் ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு இணையாக இந்திய அணி தயாராகவில்லை என்பதை தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது. மற்ற போட்டிகளில் சொதப்பினாலும் ஃபைனல் போன்ற கோப்பையை வெல்லும் போட்டிகளில் சரிவையே சந்தித்தால்கூட அதில் இருந்து விடா முயற்சியாக மீண்டு வரும் குணம் இந்திய வீரர்களிடம் குறைந்தே காணப்படுகிறது. இதுவே நேற்றைய தோல்விக்கும் காரணமாக அமைந்துவிட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்