ஆப்நகரம்

சச்சினை அவுட்டாக்கியதற்காக கொலை மிரட்டல்கள் வந்தது: டிம் பிரஸ்னன்!

கடந்த 2011 டெஸ்டில் சச்சினை 100ஆவது சதம் அடிக்கவிடாமல் விக்கெட் கைப்பற்றியதற்காக தனக்கும் அம்பயர் ராட் டக்கருக்கும் கொலை மிரட்டல்கள் வந்ததாக இங்கிலாந்து பவுலர் டிம் பிரஸ்னன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 8 Jun 2020, 12:27 pm
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின். இவர் தனது 99ஆவது சர்வதேச சதத்தை கடந்த 2011 இல் நடந்த உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் அடித்தார். இதையடுத்து இவரின் 100ஆவது சர்வதேச சதத்தை நோக்கி ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் மைதானத்தில் நடந்த டெஸ்டில் சச்சின் 91 ரன்கள் எடுத்திருந்த போது வேகப்பந்து வீச்சாளர் டிம் பிரஸ்னன் பந்தில் எல்பிடபுள்யூ முறையில் அவுட் ஆனார். இந்நிலையில் சச்சினை 100ஆவது சதம் அடிக்கவிடாமல் விக்கெட் கைப்பற்றியதற்காக தனக்கும் அம்பயர் ராட் டக்கருக்கும் கொலை மிரட்டல்கள் வந்ததாக இங்கிலாந்து பவுலர் டிம் பிரஸ்னன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Sachin Tendulkar


இதுகுறித்து பிரஸ்னன் கூறுகையில், “2011இல் சச்சினை அவுட்டாக்கிய பின், சில நாட்களில் கொலை மிரட்டல்கள் வந்தன. அதேபோல அந்த போட்டியில் சச்சினுக்கு அவுட் வழங்கிய அம்பயர் டராட் டக்கெருக்கும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டது. எனக்கு ட்விட்டர் மூலம் அச்சுறுத்தல் வந்தது. டக்கருக்கு வீட்டின் முகவரிக்கு கடிதம் மூலம் வந்தது. இதனால் இருவருமே
காவல்துறை பாதுகாப்பிற்கு விண்ணப்பித்தோம்.” என்றார்.

2011இல் தனது 99 ஆவது சதத்தை எட்டிய சச்சின், கடந்த 2012இல் நடந்த ஆசிய கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது 100ஆவது சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து 2013 இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் (100 சதங்கள்) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் 15921 ரன்களும், ஒருநாள் கிரிக்கெட்டில் 18426 ரன்களும் அடித்துள்ள சச்சின், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலிலும் சச்சின் முதலிடத்தில் உள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்