ஆப்நகரம்

ரிக்கி பாண்டிங் அம்பயர் போல நடந்து கொண்டார்: ஹர்பஜன் சிங்!

புதுடெல்லி: கடந்த 2008 இல் நடந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடனான டெஸ்டில் ரிக்கி பாண்டிங் அம்பயர் போல செயல்பட்டதாக இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 15 Jun 2020, 2:15 pm
கடந்த 2008 இல் சிட்னியில் நடந்த டெஸ்டில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், ஆஸ்திரேலியாவின் சைமண்ட்ஸ் ஆகியோர் படு மோசமாக மோதிக்கொண்டனர். மேலும் இந்த போட்டியில் பல மோசமான அம்பயர் தவறுகள் இந்திய அணிக்கு பாதமானதாக அமைந்தது.
Samayam Tamil Ricky Ponting


இந்நிலையில் இந்த டெஸ்ட் குறித்து தற்போது ஆகாஷ் சோப்ராவுடன் பேசும் போது சில விஷயங்களை நினைவுகூர்ந்துள்ளார் ஹர்பஜன் சிங். இதுகுறித்து ஹர்பஜன் கூறுகையில், “அந்த போட்டியில் ரிக்கி பாண்டிங் அம்பயர் போல் செயல்பட்டார். ஆஸ்திரேலியர்கள் களத்தில் என்ன நடக்கிறதோ அது களத்தோடு தான் இருக்க வேண்டும் என்றார்கள். ஆனால் எனக்கும் சைமண்ட்ஸ் இடையே அரங்கேறிய விஷயம் களத்தை தாண்டி வெளியேவந்தது.

நானும் சைமண்ட்ஸும் அருகே இருந்தோம். எங்களுக்கு அருகில் இருந்தது சச்சின் ஒருவர் மட்டும் தான். வேறு யாரும் அந்த சம்பவத்தின் போது எங்கள் அருகில் இல்லை. ஆனால் விசாரணையின் போது மாத்யூ ஹேடன், ஆடம் கில்கிறிஸ்ட், மைக்கேல் கிளார்க், ரிக்கி பாண்டிங் ஆகியோர் பஜ்ஜி சைமண்ட்ஸ் இட் ம் என்ன சொன்னார் என்பது எங்களுக்கு தெளிவாக கேட்டது என்றார்கள்.

அவர்கள் யாருமே இந்த படத்தில் இல்லை என நானாக நினைத்துக்கொண்டேன். எங்கள் அருகில் இருந்த சச்சினுக்கே நாங்கள் பேசியது தெளிவாக கேட்டிருக்க வாய்ப்பு குறைவு தான். எனக்கும் சைமண்ட்ஸுக்கு மட்டுமே நாங்கள் என்ன பேசினோம் என தெரியும். ஆனால் ஆஸ்திரேலிய மீடியாக்கள் என்னை மைக்கேல் ஜாக்சனாக்கி விட்டார்கள். எங்கு சென்றாலும் கேமிராவுடன் துரத்தினார்கள்” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்