ஆப்நகரம்

சுத்த ‘பைத்தியக்காரத்தனம்’... கோலி- ரோஹித் மோதல் குறித்து ரவி சாஸ்திரி விளக்கம்..!

மும்பை: கேப்டன் விராட் கோலி, துணைக்கேப்டன் ரோஹித் ஷர்மா மோதல் குறித்த தகவல்கள் சுத்த பைத்தியக்காரத்தனமானது என இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 12 Sep 2019, 6:52 am
இங்கிலாந்தில் நடந்த 50 ஓவர் கிரிக்கெட் தொடரின் அரையிறுதி தோல்விக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியில் பல்வேறு சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியில் ஒருசிலர் ரோஹித் ஷர்மாவிற்கு ஆதாவாகவும், மேலும் ஒரு சிலர் கேப்டன் கோலிக்கு ஆதரவாகவும் உள்ளதாக செய்திகள் வெளியாகின.
Samayam Tamil Virat Kohli - Rohit Sharma


கிசுகிசு
அதற்கு ஏற்ப கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மாவை சமூகவலைதளத்தில் பின் தொடர்வதை ரோஹித் நிறுத்தினார். இதற்கு அனுஷ்கா தரப்பில் இருந்து பதிலடி போஸ்ட்டுகள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த கருத்து வேறுபாடு காரணமாக அடுத்து நடந்த வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் ரோஹித் புறக்கணிக்கப்பட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

குடும்ப வன்முறை வழக்கில் இருந்து பின் வாங்கிய யுவராஜ் சகோதரர் மனைவி...!

பைத்தியக்காரத்தனம்...
இந்நிலையில் இது சுத்த பைத்தியக்காரத்தனம் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில், ‘15 பேர் கொண்ட அணியில் சில சமயத்தில் வெவ்வேற் கருத்துக்கள் இருப்பது சகஜமான ஒன்று. அது தான் தேவையும் கூட. அனைவரும் ஒரே கோட்டில் செல்ல முடியாது .

புதுக்கருத்துக்கள்...
ஒரு சிலரின் புதுமையான ஆலோசனைகள் இங்கு ஊக்கப்படுத்தப்பட வேண்டிய விஷயம். அனுபவமில்லாத வீரர்கள் சில நேரங்களில் சீனியர் வீரர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத யோசனை வழங்குவார்கள். அதை இங்கு சர்ச்சையாக எடுத்துக்கொள்ள கூடாது.


தொழில் தர்மம்..
நான் அவர்களுடன் நீண்ட நாட்கள் இருக்கிறேன். அவர்கள் தங்களுக்கான வேலை என்ன என்பது தெளிவாக தெரியும். ரோஹித் - கோலி விவகாரம் என்பது சுத்த பைத்தியக்காரத்தனம். அப்படி அந்த விஷயம் உண்மையாக இருந்திருந்தால் ரோஹித் உலகக்கோப்பையில் ஐந்து சதங்கள் ஏன் விளாசியிருக்க வேண்டும்?’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்