ஆப்நகரம்

‘காயத்தால் அவதிப்பட்ட ‘சொதப்பல்’ பேட்டருக்கு இடம்’…சாம்சன் புறக்கணிப்பு.. ரசிகர்கள் கொந்தளிப்பு!

காயத்தால் அவதிப்பட்ட சொதப்பல் வீரருக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு, நீக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Curated byமதுரை சமயன் | Samayam Tamil 1 Dec 2022, 6:55 am
இதில் டி20 தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதனால், ஒருநாள் தொடரில் சாம்சனுக்கு ரெகுலராக இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி நடக்கவில்லை. முதல் போட்டியில் மட்டும் சேர்த்துவிட்டு, பிறகு 6ஆவது பௌலிங் ஆப்சன் வேண்டும் எனக் கூறி சாம்சனை ஒதுக்கி வைத்தார்கள்.
Samayam Tamil rishabh pant suffered back injury during ind vs ban during ind vs nz 3rd odi
‘காயத்தால் அவதிப்பட்ட ‘சொதப்பல்’ பேட்டருக்கு இடம்’…சாம்சன் புறக்கணிப்பு.. ரசிகர்கள் கொந்தளிப்பு!


அணியில் ரிஷப் பந்த் நீண்ட காலமாக சொதப்பி வரும் நிலையில், அவரை நீக்காமல் வாய்ப்புக்காக காத்திருக்கும் சாம்சனை நீக்கியது கடும் அதிருப்திகளை உருவாக்கியது. குறிப்பாக, சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் ரிஷப் பந்த் 10 (16) சிறப்பாக செயல்படவில்லை.

ரிஷப் பந்திற்கு காயம்

இப்போட்டியில் ரிஷப் பந்த் பேட்டிங் செய்துவிட்டு, பெவிலியன் திரும்பியதும் அணியில் மருத்துவர்கள் உடனே ரிஷப் பந்தை பெஞ்சில் படுக்க வைத்து, முகுது பகுதியில் மருந்தை தேய்க ஆரம்பித்தார். அப்போது, ரிஷப் பந்த் வலியால் துடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ரசிகர்கள் விமர்சனம்:

அன்பிட்டாக இருந்த ரிஷப் பந்தை வம்பாக, வலுக்கட்டாயமாக்க அணியில் சேர்க்க காரணம் என்ன என பலர் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். காயத்தால் அவதிப்படும், அதுவும் தொடர்ந்து சொதப்பி வரும் ஒரு வீரருக்கு வாயப்பு கொடுத்தாலும் கொடுப்போம தவிர, சாம்சனுக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்க மாட்டோம் என்ற முடிவில் இருக்கும் இந்திய அணி நிர்வாகத்தை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இன்னும் சிலரோ, சாம்சன் உடனே இந்திய கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்துவிட்டு, வெளிநாட்டில் எதாவது ஒரு அணிக்கு விளையாட செல்ல வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்து வருகிறார்கள்.

3ஆவது போட்டி ஸ்கோர் விபரம்:

இந்தியா, நியூசிலாந்து இடையில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 47.3 ஓவர்களில் 219/10 ரன்களை சேர்த்தது. அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 18 ஓவர்களில் 104/1 ரன்கள் சேர்த்தபோது மழை குறுக்கிட்டது. DLS முறைப்படி வெற்றி, தோல்விகளை கணிக்க குறைந்தது 20 ஓவர்களாவது முடிந்திருக்க வேண்டும். அப்படி நடக்காததால், ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனால், நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்