கவுகாத்தியில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வீரர்கள் பயணித்த பேருந்தின் மீது கல் வீசி கண்ணாடியை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையே டி20 போட்டிகள் நடந்து வருகின்றன. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில், 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பிறகு, ஹோட்டலுக்குச் செல்லும் வழியில் ஆஸ்திரேலியா வீரர்கள் பயணித்த பேருந்தில் சிலர் கல்லை வீசி கண்ணாடியை உடைத்துள்ளனர்.
Pretty scary having a rock thrown through the team bus window on the way back to the hotel!! pic.twitter.com/LBBrksaDXI — Aaron Finch (@AaronFinch5) October 10, 2017 இது குறித்து, ஆஸ்திரேலிய வீரர் பின்ச் தாது ட்விட்டரில் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர், ராஜ்யவர்தன் ரத்தூர் வீரர்களின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம் என ட்விட் செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட், சம்பவத்திற்கு பிறகு வீரர்களுக்கு தற்போது அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். முன்னதாக, இந்தச் சம்பவம் குறித்து இந்திய வீரர் அஸ்வின் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்தார்.
Rock thrown at Australia cricket team bus in Guwahati
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையே டி20 போட்டிகள் நடந்து வருகின்றன. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில், 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பிறகு, ஹோட்டலுக்குச் செல்லும் வழியில் ஆஸ்திரேலியா வீரர்கள் பயணித்த பேருந்தில் சிலர் கல்லை வீசி கண்ணாடியை உடைத்துள்ளனர்.
Pretty scary having a rock thrown through the team bus window on the way back to the hotel!! pic.twitter.com/LBBrksaDXI — Aaron Finch (@AaronFinch5) October 10, 2017 இது குறித்து, ஆஸ்திரேலிய வீரர் பின்ச் தாது ட்விட்டரில் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர், ராஜ்யவர்தன் ரத்தூர் வீரர்களின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம் என ட்விட் செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட், சம்பவத்திற்கு பிறகு வீரர்களுக்கு தற்போது அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். முன்னதாக, இந்தச் சம்பவம் குறித்து இந்திய வீரர் அஸ்வின் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்தார்.
Rock thrown at Australia cricket team bus in Guwahati