ஆப்நகரம்

மீண்டும் அதிக ரன்களை குவித்து சாதனை படைத்த இந்திய அணி

இலங்கை அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 375 ரன்கள் குவித்து இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.

TOI Sports 31 Aug 2017, 7:05 pm
கொழும்பு : இலங்கை அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 375 ரன்கள் குவித்து இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.
Samayam Tamil rohit kohli tons take india to 375
மீண்டும் அதிக ரன்களை குவித்து சாதனை படைத்த இந்திய அணி


கோலி, சர்மா அபாரம் ;
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தவான் 4 ரன்களில் அவுட்டான நிலையில், ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா, கோலி இணை இலங்கை பவுலர்களின் பந்துவீச்சை மைதானத்தில் வானவேடிக்கை காட்டி ரன்களை சேர்த்தனர்.

கோலி 96 பந்தில் 2சிக்ஸ், 17 பவுண்டரிகள் விளாசி 131 ரன்களை எடுத்தார். ரோகித் சர்மா 88 பந்தில் 3 சிக்ஸர் 11 பவுண்டரிகளை விளாசி 104 ரன்களை குவித்தார்.

பின்னர் வந்த பாண்டியா 19, கே எல் ராகுல் 7 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

ஜொலித்த தோனி, மணீஸ் பாண்டே இணை :
பின்னர் இணைந்த மணீஸ் பாண்டே, தோனி இணை வேகமாக ரன் சேர்த்து அணி ஸ்கோரை உயர்த்தினர்.

50 ஓவர் முடிவில் பாண்டே 50, தோனி 49 ரன்கள் அடித்திருந்த நிலையில் 5 விக்கெட்டுக்கு 375 ரன்களை குவித்து, இலங்கைக்கு இமாலய ரன் இலக்கை நிர்ணயித்துள்ளது.

ஏற்கனவே 5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் 3-0 என கைப்பற்றியுள்ள நிலையில், 376 ரன்கள் என்ற இலக்கை எட்ட நினைத்தாலும் இலங்கை மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்