ஆப்நகரம்

இனி ஒரு பயலும் தப்பிக்க முடியாது! : வீரரை கண்காணிக்கும் கம்ப்யூட்டர் சிப்!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் ரஹானே கம்ப்யூட்டர் சிப் ஒன்றை தங்களது பேட்டில் பொருத்தி விளையாட உள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

TOI Sports 30 May 2017, 3:52 pm
லண்டன் : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் ரஹானே கம்ப்யூட்டர் சிப் ஒன்றை தங்களது பேட்டில் பொருத்தி விளையாட உள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
Samayam Tamil rohit rahane to use chip installed bats in champions trophy
இனி ஒரு பயலும் தப்பிக்க முடியாது! : வீரரை கண்காணிக்கும் கம்ப்யூட்டர் சிப்!


கணினியின் மூளையாக கருதப்படும் புராசசர் தயாரிக்கும் உலகின் மிகப்பெரிய நிறுவனம் இண்டெல். இந்த நிறுவனம் தயாரித்துள்ளத ஒரு கணினி சிப் கிரிக்கெட் விளையாடும் வீரர்களின் பேட்டில் பொருத்தப்பட உள்ளது.

இந்த சிப் மூலம், அந்த பேட் வைத்து விளையாடும் வீரர் எந்த திசையில் ஒரு பந்தை அடித்துள்ளார். எத்தனை முறை லெக் சைடு, ஆஃப் சைடில் பந்தை அடித்துள்ளார் என்பன போன்ற பல விஷயங்கள் கண்காணிக்கப்பட முடியும் என இண்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.



இந்த தகவல்களைப் பயன்படுத்தி ஒரு வீரர் தன் பேட்டிங்கை முன்னேற்ற மேலும் எந்த வகையில் முயற்சிக்க வேண்டும் என பயிற்சியாளரால் வீரரை நெறிப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் இந்திய வீரர்களான ரோகித் சர்மா மற்றும் ரஹானேவின் பேட்டில் இந்த சிப் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்