ஆப்நகரம்

பங்களாதேஷ் அணியை பந்தாடிய ரோஹித் சர்மா!!

முத்தரப்பு தொடரில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 89 ரன்களை குவித்து மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளார்.

Samayam Tamil 14 Mar 2018, 8:51 pm
முத்தரப்பு தொடரில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 89 ரன்களை குவித்து மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளார்.
Samayam Tamil rohit sharma hits back on his critics by scoring against bangladesh
பங்களாதேஷ் அணியை பந்தாடிய ரோஹித் சர்மா!!


இந்தியா-இலங்கை-பங்களாதேஷ் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 5வது டி20 போட்டி கொழும்புவில் இந்தியா-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மாவும், தவானும், முதலில் அதிகமாக அதிரடி காட்டாமல் பொறுமையாக ரன்களை சேர்க்கத் தொடங்கினர்.

நல்ல தொடக்கம் கொடுத்த ஷிக்கர் தவான் 35 ரன்களின் ரூபல் பந்துவீச்சில் போல்டானார். அதன்பின் களமிறங்கிய ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி பந்து வரை நிலைத்து நின்று ஆடிய ரோஹித் சர்மா 61 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்சர்களுடன் 89 ரன்கள் குவித்து ரன் அவுட்டானார். இதன்மூலம், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 176 ரன்களை குவித்தது.

தென்ஆப்பிரிக்கா தொடர் தொடங்கியது முதல் பெரிதாக சோபிக்காத ரோஹித் சர்மா, தற்போது மீண்டும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்