ஆப்நகரம்

‘ரோஹித் ஷர்மாவின்’…கிரிக்கெட் வாழ்க்கையை காப்பற்றியதே..அந்த ஒரு முடிவுதான்: இயான் சேப்பல் பளிச்!

ரோஹித் ஷர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கையை கைப்பற்றியதே அந்த ஒரு முடிவுதான் என இயான் சேப்பல் பேசியுள்ளார்.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 15 Feb 2023, 10:51 am
உலக கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத சாதனை நாயகனாக விளங்கி வரும் ரோஹித் ஷர்மா, மூன்று விதமான கிரிக்கெட்டிலும் கேபடனாக சதம் அடித்த, முதல் இந்திய கேப்டன் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
Samayam Tamil ரோஹித் ஷர்மா, இயான் சேப்பல்


மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்றுமுறை இரட்டை சதம் சதம் அடித்த ஒரே வீரர். அதுமட்டுமல்ல, 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று கோப்பை வென்ற வீரராகவும் இருக்கிறார். ஆம், கோலிக்கு முன்பே உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்திருந்தார். இருப்பினும், 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் ரோஹித் ஷர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், இனி ரோஹித் ஷர்மாவுக்கு வாய்ப்பே கிடைக்காது என்ற நிலைதான் இருந்தது.

இயான் சேப்பல் அதிரடி கருத்து:

இருப்பினும், மீண்டும் அணியில் இடம்பிடித்து இன்று கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் மீண்டும் அணியில் இடம்பெற முக்கிய காரணமாக இருந்தது ஒரேயொரு முடிவுதான். அதுகுறித்து, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் லெஜண்ட் வீரர் இயான் சேப்பல் பேசியுள்ளார்.

‘‘ரோஹித் ஷர்மாவுக்கு திடீரென்று வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. அடுத்து, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வாய்ப்பினை பெற்றார். பிட்ச் பேட்டிங் செய்ய மிகவும் கடினமாக இருந்தது. இருப்பினும், ரோஹித் ஷர்மா அப்போட்டியில் தனது முழு திறனையும் வெளிப்படுத்தி அபாரமாக விளையாடினார். எப்போது அடிக்க வேண்டுமோ அப்படி அடித்தார், மற்ற நேரங்களில் தடுப்பாட்டத்தில் மட்டும் ஈடுபட்டு அசத்தினார். அந்த ஆட்டம்தான் அவர் மீது இருந்த பார்வையை மாற்றியது”

‘‘அடுத்து ஓபனராக வாய்ப்பினை பெற்றார். இதுதான், ரோஹித் ஷர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பம். ரோஹித் பலதிறமைகளை பெற்றிருந்தாலும், மிடில் வரிசையில் அவரால் சிறப்பாக விளையாடியிருக்க முடியாது. அவர் ஒரு ஓபனர் வீரர். அதனை அணி நிர்வாகம் கண்டுபிடித்தது. ஆகையால்தான், ஓபனர் வாய்ப்பு கிடைத்தது. சிறப்பாக விளையாடி அசத்தினார். மிடில் வரிசையிலேயே விளையாடியிருந்தால், ரோஹித் எப்போதே அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார்” எனக் கூறினார்.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்