கொண்டாடும் ரசிகர்கள்
இந்நிலையில் ஐசிசி நடத்தும் மூன்று உலகக்கோப்பையை (டி-20 உலகக்கோப்பை (2007), 50 ஓவர் உலகக்கோப்பை (2011), மினி உலகக்கோப்பை (2013)) இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்த கேப்டன் தோனியை ரசிகர்கள் இதுவரை கிடைத்த கேப்டன்களிலேயே மிகச்சிறந்த கேப்டன் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ரோஹித் கருத்து
இதற்கிடையில் இந்திய ரசிகர்களை போலவே தற்போதைய இந்திய துணைக்கேப்டனாக உள்ள ரோஹித் ஷர்மாவும் இந்திய அணி இதுவரை பார்த்த கேப்டன்களில் தோனி தான் மிகச்சிறந்த கேப்டன் என தெரிவித்துள்ளார். மேலும் தோனியின் அமைதியான குணம் மற்றும் இளம் வீரர்களை ஊக்குவிக்கும் குணத்தையும் ரோஹித் ஷர்மா பாராட்டியுள்ளார்.
இல்லாத போதும்
அணியில் தோனி தலைமையில் தனது 9 ஆண்டு பயணம் எப்படி வடிவமைக்கப்பட்டது என்றும், அவர் தற்போது அணியில் இல்லாத போதும் அணியின் வெற்றிக்கு தன்னால் எப்படி கைகொடுக்க அவரின் கருத்துக்கள் எப்படி உதவுகிறது என்றும் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.
சிறந்த கேப்டன்
இதுகுறித்து ரோஹித் ஷர்மா கூறுகையில் , “தோனி எப்போதும் அமைதியான குணம் கொண்டவர் என்பது ஒட்டு மொத்த இந்தியாவுக்கே தெரியும். அந்த குணம் தான் களத்தில் அவர் மிகச்சிறந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது. தற்போது இந்திய அணிக்கு கிடைத்த கேப்டன்களிலேயே தோனி தான் மிகவும் வெற்றிகரமான கேப்டன். மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்றுள்ளார். மேலும் ஐபிஎல் கோப்பைகளையும் தான். இது வரை இந்தியா பார்த்த மிகச்சிறந்த கேப்டன் தோனி தான்.
Twitter-Anpadh educated
எவன் இருப்பான்
அதற்கு ஒரு காரணம் உள்ளது. நெருக்கடியான நேரத்தில் இளம் பவுலர்களை மிகச்சிறப்பாக கையாளுவார். இக்கட்டான நேரத்தில் பதட்டமாக உள்ள பவுலரிடம் நேரடியாக சென்று அவரின் தோள் மீது கைப்போட்டுக்கொண்டு பேசுவார். ஒரு இளம் வீரரை சீனியர் வீரர் ஒருவர் இப்படி நடத்தினால், அந்த இளம் வீரரின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்” என்றார்.