ஆப்நகரம்

மகளின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தை வெளியிட்ட ரோஹித் சர்மா

கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா தனது செல்ல மகளின் பிஞ்சு விரல்களை கைப்பற்றி எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 4 Jan 2019, 1:34 am
இந்திய கிரிக்கெட்டின் அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா தன்னுடைய மகளின் புகைப்படத்தை தனக்கான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil செல்ல மகளின் புகைப்பட்டத்தை ட்விட்டரில் பதிவிட்ட ரோஹித் சர்மா


2018ம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவுக்கு மகிழ்ச்சிமிக்க ஆண்டாகவே அமைந்தது. கடந்த டிசமர் 31ம் தேதி ரோஹித் சர்மா மற்றும் ரித்திகா தம்பதி பெண் குழந்தைக்கு பெற்றோராகினர்.


இதற்காக கிரிக்கெட் ஆர்வலர்கள், திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர் என பல தரப்பினர் ரோஹித் சர்மாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை ஆராவாரமாக கொண்டாடினர்.

தற்போது ரோஹித் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், ”உலகிற்கே ஹலோ.... 2019ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்” என்று பதிவிட்டு தன்னுடைய செல்ல மகளின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

மகளின் பச்சிளம் கையின் பிஞ்சு விரல்களை பற்றி ரோஹித் சர்மா புகைப்படம் எடுத்துள்ளார். அந்த படம் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. மேலும் கிரிக்கெட் ரசிகர்கள் பலர் அந்த படத்தை தொடர்ந்து ரி-ட்வீட் செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்