ஆப்நகரம்

வலுக்கும் கோலி - ரோகித் சர்மா மறைமுக மோதல்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, துணைக்கேப்டன் ரோகித் சர்மா இடையேயான மறைமுக மோதல் வலுத்துள்ளது.

Samayam Tamil 26 Jul 2019, 4:35 pm
நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் தோல்விக்கு பின், இந்திய அணிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. இந்திய அணியில் கோலிக்கு ஆதரவாக சிலரும், ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக சிலரும் செயல்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகக் கோப்பை தொடரின் போது ரோகித்தின் ஆலோசனைகளை கோலி கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
Samayam Tamil Virat Kohli Rohit Sharma


ஒருநாள், டி20 போட்டிகளில் ரோகித் சர்மாவை கேப்டனாகவும், டெஸ்ட்டில் கோலியை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ., முடிவில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணிக்கு விராட் கோலியே கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.


இதற்கிடையில் ரோகித் சர்மா, கோலி இடையே மறைமுக மோதல் நிலவுகிறது. ரோகித் சர்மா இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை ஃபாலோ செய்வதை தவிர்த்தார்.
அதே போல அனுஷ்கா ஷர்மாவை அன்ஃபாலோ செய்தார் ரோகித்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக அனுஷ்கா ஷர்மாவின் வைத்துள்ள ஸ்டேட்டஸில், “A wise man once said nothing. Only truth can shake hands with silence in a mess of false appearances” என குறிப்பிட்டுள்ளார்.


இந்த யூக மோதல் இந்திய கிரிக்கெட் அணிக்கு நல்லதில்லை. இதனால் விரைவில் இவர்கள் இந்த மறைமுக மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்