ஆப்நகரம்

சமூக நலப்பணிக்காக ஒரு கிரிக்கெட் போட்டி!

அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதி செய்து தருதல், பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட சமூக நலப்பணிக்காக கோவையில் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

Samayam Tamil 30 Dec 2018, 9:38 am
அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதி செய்து தருதல், பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட சமூக நலப்பணிக்காக கோவையில் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
Samayam Tamil IMG-20181226-WA0026


RHCL சீசன் 2, ரோட்டரி சங்கம் கோயம்புத்தூர் ஹெரிட்டேஜ் நடத்தும் இந்த கிரிக்கெட் போட்டி பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், சமூக அமைப்புகள் மற்றும்தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அணிகள் கலந்து கொள்ளலாம். சென்ற வருடம் நவம்பர் 2017 ல் முதல் சீசன் சிறப்பாக நடைபெற்றது.

ரோட்டரி சங்கம் என்பது உலகம் முழுவதும் 12 லட்சம் உறுப்பினர்களைகொண்டது. ரோட்டரி எளியோர் வாழ்வில் ஒரு நேர்மறையான வேறுபாட்டை கொண்டு வருவதற்கு உண்மையான அர்ப்பணிப்புடன் சேவைகள் செய்து வருகிறது .

இந்த RHCL போட்டியும் அப்படி ஒரு பொது நோக்கத்திற்காக நடத்தப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் நிதி அரசு பள்ளிகளில் சுத்தமான குடிநீர், அடிப்படை சுகாதார வசதிகள் மற்றும் பராமரிப்பு, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும்.


போட்டியை வழங்குபவர்கள் SS மார்பிள். இனைந்து வழங்குபவர்கள் பியூட்டி வேர்ஸ், பர்ப்பிள் பே, AVA அசோசியேட்ஸ்.

போட்டி நடைபெறும் இடம் :

இந்துஸ்தான் கல்லூரி மைதானம்,
நவ இந்தியா, கோயம்புத்தூர்.
தேதி: 5 மற்றும் 6 ஜனவரி
முதல் பரிசு: INR 75000
இரண்டாம் பரிசு : INR 50000
மூன்றாம் பரிசு : INR 25000
நான்காம் பரிசு : INR 15000

மேலும் விவரங்களுக்கு :
கிறிஸ்டோபர் ராஜ்குமார் 9894074400.
ஶ்ரீனிவாசன் 98946 16155

அடுத்த செய்தி

டிரெண்டிங்