ஆப்நகரம்

கடைசியா கரையேறிய கருண் நாயர்: பின்னி பெடலெடுத்த புனே!

புனே அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், கருண் நாயர் அரைசதம் அடித்து கைகொடுக்க, டெல்லி அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது.

TOI Sports 12 May 2017, 9:47 pm
புதுடெல்லி: புனே அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், கருண் நாயர் அரைசதம் அடித்து கைகொடுக்க, டெல்லி அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது.
Samayam Tamil rps need 169 to win against dd
கடைசியா கரையேறிய கருண் நாயர்: பின்னி பெடலெடுத்த புனே!


இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் டெல்லியில் நடக்கும் 55வது லீக் போட்டியில், புனே, டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் ’டாஸ்’ வென்ற டெல்லி அணி கேப்டன் ஜாகிர் கான், முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

டெல்லி அணியில் கார்லோஸ் பிராத்வெயிட்டுக்கு பதிலாக நதீம் சேர்க்கப்பட்டார். இதே போல, புனே அணியில், சொந்த ஊருக்கு பறந்த இம்ரான் தாகிருக்கு பதிலாக, ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா இடம் பிடித்தார்.

சொதப்பல் துவக்கம்:
இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணியின், துவக்க வீரர் சஞ்சு சாம்சன் (2), ஸ்ரேயாஷ் ஐயர் (3) சொதப்பல் துவக்கம் அளித்தனர். தொடர்ந்து வந்த பண்ட் (36), சாமுவேல்ஸ் (27) ஓரளவு கைகொடுத்தனர்.

கரையேறிய கருண்:
இத்தொடரில் இதுவரை சோபிக்காத முச்சத நாயகன் கருண் நாயர் (64) ஒருவழியாக அரைசதம் அடித்து கைகொடுத்தார். பின்வரிசை வீரர்கள், சுமாக கைகொடுக்க, டெல்லி அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது.

இதன் மூலம் புனே அணிக்கு 169 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. புனே அணி சார்பில், கோடி நாயகன் ஸ்டோக்ஸ், உனக்தத், அதிகபட்சமாக 2 விக்கெட் கைப்பற்றினர். ஜம்பா, கிறிஸ்டிடன் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்