ஆப்நகரம்

பிராட்மேனைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்: ஓய்வில் இருக்கும் வீரர்களுக்கு சச்சின் அட்வைஸ்!

எனது நினைவுகள் சரியாக இருக்கும்பட்சத்தில், 1994 மார்ச் முதல் 1995 அக்டோபர் வரை கிட்டதட்ட 18 மாதங்களாக நாங்கள் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றோம்” என்று நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

Samayam Tamil 28 Aug 2020, 1:54 pm
கொரோனா ஊடரங்கு காரணமாகக் கடந்த சில மாதங்களாக, வேறுவழியின்றி வீரர்கள் ஓய்வில் இருக்கிறார்கள். இந்நிலையில், “மீண்டும் போட்டிகளில் கலந்து கொண்டால் சிறப்பாக விளையாட முடியுமா?” என்ற கவலையில் இருக்கும் வீரர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் சச்சின் டெண்டுல்கர் பேசியுள்ளார்.
Samayam Tamil sachin advices the players to look don bradman and achieve after lockdown matches
பிராட்மேனைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்: ஓய்வில் இருக்கும் வீரர்களுக்கு சச்சின் அட்வைஸ்!


அவர் தெரிவித்ததாவது: “சில மாதங்களாக ஓய்வில் இருக்கும் வீரர்கள் ஏன் கவலைப்பட வேண்டும். கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் டொனால்ட் பிராட்மேன் இரண்டாம் உலகப் போர் காரணமாக 1939 முதல் 1945 வரை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இருப்பினும், 7 வருடங்களுக்குப் பின்பு, மீண்டும் கிரிக்கெட் உலகிற்கு திரும்பி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 99.94 சராசரியுடன் 52 போட்டிகள் வரை விளையாடியுள்ளார். அவரைப் போல் வீரர்கள் அனைவரும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்”

டொனால்ட் பிராட்மேன் 112ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ள சச்சின் டெண்டுல்கர், “சர் டான் பிராட்மேன், இரண்டாம் உலகப் போர் காரணமாக 7 வருடங்கள் வரை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இன்று, கொரோனா ஊரடங்கால் சில மாதங்களாகக் கட்டாய ஓய்வில் இருக்கும் வீரர்கள் கவலையில் இருக்கிறார்கள். டான் பிராட்மேனை முன்மாதிரியாகக் கொண்டு வீரர்கள் அனைவரும் புத்துணர்ச்சியுடன் விளையாட்டு உலகிற்குத் திரும்பத் தயாராகுங்கள். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சர் டான்” என்று தெரிவித்துள்ளார்




சர் டோனால்ட் பிராட்மேன் 52 டெஸ்ட் போட்டிகளில் 80 இன்னிங்ஸ் களம் கண்டு 6996 ரன்கள் குவித்துள்ளார். ஒரு இன்னிங்ஸில் 334 என்ற அதிகபட்ச ரன்களுடன் 29 சதம், 12 இரட்டை சதம், 2 முச்சதம் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சின் வெளியிட்டுள்ள இந்த ட்வீட் குறித்து தனியார் பத்திரிக்கை ஒன்று அவரிடம் பேட்டி கண்டது. அப்போது பேசிய அவர், கிட்டதட்ட ஆறு மாதங்களாக வீட்டினுள் முடக்கியிருப்பதாக விளையாட்டு வீரர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். நான் இந்திய அணியில் இருந்தபோது, பல மாதங்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்திருக்கிறோம், இதெல்லாம் சகஜம் என்று தெரிவித்தார்.

ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியீடு: கோலி டாப், ராகுல் இரண்டாம் இடம்!

“எனது நினைவுகள் சரியாக இருக்கும்பட்சத்தில், 1994 மார்ச் முதல் 1995 அக்டோபர் வரை கிட்டதட்ட 18 மாதங்களாக நாங்கள் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றோம்” என்று நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

“90களில் 3 முதல் 4 மாதங்கள் வரை கூட நாங்கள் கிரிக்கெட் விளையாடாமல் இருப்போம். அதெல்லாம் சகஜமான விசயம். இப்போதும் சில மாதங்களாக எவ்வித கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவில்லை. இதையும் சகஜமாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்