ஆப்நகரம்

தோனியின் பங்களிப்பு மகத்தானது... சச்சின் புகழாரம்!!

இந்திய கிரிக்கெட்டில் தோனியின் பங்களிப்பு மகத்தானது என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 15 Aug 2020, 10:09 pm
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிதத்துள்ளார்.
Samayam Tamil tendulkar


சுதந்திர தினத்தில், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்தபடி தோனி ஓய்வை அறிவித்துள்ளது அவரது கோடிக்கணக்கான ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட்டில் தோனியின் பங்களிப்பு மகத்தானது என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " 2011 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தோனியுடன் இணைந்து விளையாடி கோப்பையை கைப்பற்றியது என் வாழ்நாளில் மறக்க முடியாத சிறந்த தருணமாகும்.

இந்திய கிரிக்கெட்டில் தோனியில் பங்களிப்பு மகத்தானது. அவருக்கு, அவரது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துக்கள்" என்று தமது ட்விட்டர் பதிவில் சச்சின் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்