ஆப்நகரம்

கடவுளுடன் கைகுலுக்கியதாக உணர்ந்தேன் : யுவராஜ் சிங்!

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், சச்சினை முதலில் சந்தித்த தருணம் குறித்து பகிர்ந்துள்ளார்.

Samayam Tamil 11 Jun 2020, 1:31 pm
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று, ஒரு வருடமானது. இதையடுத்து MissYouYuvi என்ற ஹாஸ்டேக் டிரெண்டானது. இந்நிலையில் யுவராஜ் சிங் தனது ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்தார். இதற்கிடையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேனான யுவராஜ் சிங் ஜாம்பவான் சச்சினுடனான தனது முதல் சந்திப்பை நினைவு குறித்து பகிர்ந்துள்ளார். அது கடவுளுடன் கைகுலுக்கியது போல் உணர்ந்ததாகவும் யுவராஜ் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil yuvraj Singh


யுவராஜ் சிங் இந்திய அணிக்காக கடந்த 2000 இல் களமிறங்கினார். அவர் சச்சின், சவுரவ் கங்குலி, ராகுல் திராவிட் ஆகியோருடன் விளையாடியுள்ளார். இந்தியா அணியின் 2007 டி 20 உலகக் கோப்பை வெற்றி, 2011 ஒருநாள் உலகக் கோப்பை வெற்றிகளிலும் யுவராஜ் சிங் முக்கிய பங்குவகித்தார்.


யுவராஜ் சிங் ட்விட்டர் பதிவில், “நன்றி, மாஸ்டர். நான் உங்களை முதலில் சந்தித்தபோது, கடவுளுடன் கைகுலுக்கியதாக உணர்ந்தேன். என் வாழ்க்கையில் கடினமான காலங்களில் நீங்கள் என்னை வழிநடத்தியுள்ளீர்கள். திறமை மீது நம்பிக்கை வைக்க எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளீர்கள்”என குறிப்பிட்டுள்ளார்.


இதற்கிடையில், MissYouYuvi என்ற ஹாஸ்டேக் டிரெண்டான நிலையில் யுவராஜ் சிங் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்தார். ரசிகர்களிடமிருந்து இவ்வளவு அன்பைப் பெற்றிருப்பது என் பாக்கியம். இந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றியதற்கு நன்றி. என் கடினமான காலங்களில் மிகவும் ஆதரவாக இருந்துள்ளீர்கள்” என பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்