ஆப்நகரம்

மாரத்தான் வீரர்களுக்கு 100 ஜோடி ஷூ பரிசளித்த சச்சின்

மும்பையில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தையத்தில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் 100 பேருக்கு ஓட்டப்பந்தைய ஷூக்களை வழங்கினார்.

Samayam Tamil 28 Jul 2017, 12:10 pm
மும்பையில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தையத்தில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் 100 பேருக்கு ஓட்டப்பந்தைய ஷூக்களை வழங்கினார்.
Samayam Tamil sachin tendulkar highlights running for health charity at marathon event
மாரத்தான் வீரர்களுக்கு 100 ஜோடி ஷூ பரிசளித்த சச்சின்


மும்பையில் ஐடிபிஐ வங்கி நேற்று நடத்திய இரண்டாவது மாரத்தான் போட்டியில் சிறப்பு விருந்தனராக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்று ஓட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்த மாரத்தானில் 15 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.

மாரத்தான் ஓட்டம் நிறைவுற்ற பின் பேசிய சச்சின், 2020ஆம் ஆண்டிற்குள் இந்தியாதான் அதிக இளைஞர்கள் உள்ள நாடாக இருக்கும் என்றும் எனவே, இந்திய இளைஞர்கள் அனைவரும் தங்களை திடகாத்திரமாக வைத்துக்கொள்ள ஏதேனும் உடல்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் 100 பேருக்கு ஓட்டப்பந்தைய ஷூக்களையும் சச்சின் பரிசாக வழங்கினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்