விசாகப்பட்டினம்: முன்னாள் இந்திய வீரர் ரவிசாஸ்திரி பத்த வைத்த ‘டிரேசர் புல்லட்’ தீ காட்டுத்தீயை விட வேகமாக பரவிவருகிறது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ‘டிரா’வில் முடிந்தது. இருஅணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. இது இந்திய கேப்டன் விராட் கோலியின் 50 வது டெஸ்ட் போட்டியாகும். இதில் இந்திய அணி, முதல் இன்னிங்சில் 455 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில், 255 ரன்கள் எடுத்தது. இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி, 204 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணிக்கு 405 ரன்கள் என்ற சாதனை இலக்கை நிர்ணயித்தது.
இதன் இரண்டாவது இன்னிங்சில் இந்திய கேப்டன் கோலி ‘பேட்டிங்’ செய்த போது, வர்ணனையாளராக இருந்த முன்னாள் கேப்டன் ரவிசாஸ்திரி, ‘டிரேசர் புல்லட்’ என்ற வார்த்தையை பயன்படுத்தினார். அந்த வார்த்தையை தன்னைப்போல உச்சரிக்கும்படி தனது சக வர்ணனையாளர்களிடம் ஒரு சவாலாக கொடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட அவர்களும் உச்சரித்தனர்.
தற்போது இதை சவாலாக எடுத்துக்கொண்டு சமூகவலைதளங்களில் பலரும் உச்சரித்தபடி வீடியோக்களை வெளியிட்டுவருகின்றனர். இந்த சவாலை, இந்திய வீரர்களான சச்சின், டிராவிட், லட்சுமணும் ஏற்றுக்கொண்டு பேசியுள்ளார். இவர்களைத்தவிர, இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலியும் இந்த சவாலை ஏற்றுக்கொண்டு பேசியுள்ளார். ஆனால் முன்னாள் கேப்டன் கங்குலி மட்டும் இந்த சவாலை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ‘டிரா’வில் முடிந்தது. இருஅணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. இது இந்திய கேப்டன் விராட் கோலியின் 50 வது டெஸ்ட் போட்டியாகும். இதில் இந்திய அணி, முதல் இன்னிங்சில் 455 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில், 255 ரன்கள் எடுத்தது. இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி, 204 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணிக்கு 405 ரன்கள் என்ற சாதனை இலக்கை நிர்ணயித்தது.
இதன் இரண்டாவது இன்னிங்சில் இந்திய கேப்டன் கோலி ‘பேட்டிங்’ செய்த போது, வர்ணனையாளராக இருந்த முன்னாள் கேப்டன் ரவிசாஸ்திரி, ‘டிரேசர் புல்லட்’ என்ற வார்த்தையை பயன்படுத்தினார். அந்த வார்த்தையை தன்னைப்போல உச்சரிக்கும்படி தனது சக வர்ணனையாளர்களிடம் ஒரு சவாலாக கொடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட அவர்களும் உச்சரித்தனர்.
தற்போது இதை சவாலாக எடுத்துக்கொண்டு சமூகவலைதளங்களில் பலரும் உச்சரித்தபடி வீடியோக்களை வெளியிட்டுவருகின்றனர். இந்த சவாலை, இந்திய வீரர்களான சச்சின், டிராவிட், லட்சுமணும் ஏற்றுக்கொண்டு பேசியுள்ளார். இவர்களைத்தவிர, இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலியும் இந்த சவாலை ஏற்றுக்கொண்டு பேசியுள்ளார். ஆனால் முன்னாள் கேப்டன் கங்குலி மட்டும் இந்த சவாலை ஏற்றுக்கொள்ளவில்லை.