ஆப்நகரம்

ரசிகர் கும்பலில் மாட்டிக்கொண்ட தோனி மனைவி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் மனைவி சாக்ஷி ராஞ்சியில் உள்ள கோயில் ஒன்றில் பூஜை செய்வதற்காக நீண்ட நேரம் காத்திருந்தார்.

TNN 5 Sep 2017, 2:30 pm
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் மனைவி சாக்ஷி ராஞ்சியில் உள்ள கோயில் ஒன்றில் பூஜை செய்வதற்காக நீண்ட நேரம் காத்திருந்தார்.
Samayam Tamil sakshi dhoni spotted outside a temple patiently waiting for over 30 minutes
ரசிகர் கும்பலில் மாட்டிக்கொண்ட தோனி மனைவி


இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள தெவாரி கோயிலில் அவரது மனைவி பூஜை சாக்ஷி சனிக்கிழமையன்று சென்றிருக்கிறார்.

கோயில் திறப்பதற்கு முன்பே பூஜைக்கான பொருட்களுடன் தயாராகச் சென்றுவிட்ட சாக்ஷி நடை திறப்பதற்காகக அரைமணி நேரத்திற்கும் அதிகமாக காத்திருந்தார். அப்போது, அவரை தோனியின் மனைவி என்று அடையாளம் கண்ட அப்பகுதி மக்கள் கூட்டமாகக் கூடிவிட்டனர்.

பின்னர், நடை திறக்கப்பட்டதும் பூஜையை முடித்துவிட்டுக் கிளம்பியுள்ளார் சாக்ஷி.

அந்த கோயில் தோனிக்கு மிகவும் பிடித்தமானது என்றும் ஒவ்வொரு முறை ராஞ்சிக்கு வரும்போதும் அவர் அந்த கோயிலுக்கு வந்து தரிசனம் செய்வார். அதனால், அவரது மனைவி சாக்ஷி கணவருக்காக வேண்டிக்கொண்டு அந்த கோயிலில் பூஜை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்