ஆப்நகரம்

‘இந்தாண்டிற்கான’…வரும் ஆனா வராது விருது: இந்த வீரருக்குத்தான்.. ஏமாற்றத்தை தந்தவர்!

ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு வீரர்களுக்கான விருதை சமயம் தமிழ் அறிவித்து வருகிறது.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 2 Dec 2022, 10:32 am
ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு, அந்தாண்டு இறுதியில் டிசம்பர் மாதத்தில் சமயம் தமிழ் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil இந்திய அணி


இந்தாண்டு சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு மட்டுமல்ல, சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டுச் சொதப்பிய வீரர்களுக்கும் வித்தியாசமான முறையில் விருதுகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், ‘வரும் ஆனா வராது விருது’ இந்தாண்டில் இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கு முக்கிய காரணங்கள் இருக்கிறது.

ரோஹித் பேட்டி:

விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகியப் பிறகு கேப்டன் பதவியை ஏற்ற ரோஹித் ஷர்மா, ‘‘இந்திய அணியின் மிடில் வரிசை மிகவும் பலவீனமாக இருக்கிறது. ஓபனர்கள் விரைந்து ஆட்டமிழந்தால், இந்தியாவின் தோல்வி கிட்டதட்ட உறுதியாகிவிடுகிறது. ஆகையில், மிடில் வரிசையை பலப்படுத்துவேன்” என ரோஹித் ஷர்மா கூறினார். அதை செய்தும் காட்டினார்.

வெற்றிநடை போட்ட ரோஹித்:

ஆம், மிடில் வரிசையில் சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, ஹார்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் என மிரட்டலாக பேட்டர்கள் இடம்பெற்றார்கள். இதனால், இருதரப்பு தொடர்களில் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என அனைத்து அணிகளுக்கும் எதிராகவும் இந்திய அணி அபாரமாக செயல்பட்டு வெற்றிகளை குவித்தது. தோல்வியை காணாத கேப்டனாக ரோஹித் ஷர்மா வெற்றிநடை போட்டார்.

தொடர் தோல்வி:


இதனால் ஆசியக் கோப்பை 2022, டி20 உலகக் கோப்பை 2022 தொடரில் இந்தியா நிச்சயம் கோப்பை வென்றுகொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை. ஆசியக் கோப்பையில் பைனலுக்கு கூட முன்னேறவில்லை. டி20 உலகக் கோப்பையில் அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் படுமோசமாக தோற்று வெளியேறியது.

காரணம் இதுதான்:

இந்த தோல்விக்கு முக்கிய காரணம் ஓபனர்கள் ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல் இருவரும் ஓபனிங்கில் ஓவருக்கு சராசரியாக 6 ரன்களை குவித்ததுதான். பந்துவீச்சில் பும்ரா இல்லாததும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

வரும் ஆனா வராது விருது:

இருதரப்பு தொடர்களில் அதிரடியாக செயல்பட்டு, வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்து கோப்பை வென்றுகொடுத்த கேப்டன் ரோஹித் ஷர்மா, ஆசியக் கோப்பை, டி20 உலகக் கோப்பையில் ஏமாற்றத்தையே பரிசாக கொடுத்தார். இருதரப்பு கோப்பைகள் வந்தது, ஆசியக் கோப்பை, டி20 உலகக் கோப்பை வரவில்லை. இதனால், ‘வரும் ஆனா வராது விருது’ ரோஹித் ஷர்மாவுக்கு வழங்கப்படுகிறது.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்