ஆப்நகரம்

தோனியே நேரில் பாராட்டிய இரண்டரை வயது சென்னை சிறுவனுக்கு புதிய விருது

சென்னையை சேர்ந்த இரண்டரை வயது சிறுவன் சனுஷ் சூர்யதேவ் முருகன் ராஜ் மிக இளம் வயது தொழில்முறை கிரிக்கெட் வீரர் என்ற ஆசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

Samayam Tamil 16 Jun 2018, 10:41 pm
சென்னையை சேர்ந்த இரண்டரை வயது சிறுவன் சனுஷ் சூர்யதேவ் முருகன் ராஜ் மிக இளம் வயது தொழில்முறை கிரிக்கெட் வீரர் என்ற ஆசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
Samayam Tamil Sanush Suryadev 1


இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு தான் மிக விரும்பி பார்க்கப்படும் விளையாட்டாக உள்ளது. இது பெரியவர்களை மட்டுமல்லாமல், குழந்தைகளையு ஈர்த்துள்ளது. சிறிய குழந்தைகள் கூட கிரிக்கெட் விரும்பி விளையாடுகின்றனர்.

2 1/2 வயதில் அசத்தல் கிரிக்கெட் வீரர் :
இப்படி ஒரு சூழலில் வளர்ந்து வரும் சென்னையை சேர்ந்த சனுஷ் சூர்யதேவ் என்ற இரண்டரை வயது சிறுவன் கிரிக்கெட்டில் பேட்டிங், பவுலிங் என குழந்தையின் அருமையான அழகில் விளையாடுகிறார்.

சனுஷின் அட்டகாசமான பேட்டிங்கை பார்த்த இந்திய கிரிக்கெட் அணியின் தல என செல்லமாக அழைக்கப்படும் தோனியே, சில மாதங்களுக்கு முன் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

ஆசிய சாதனை புத்தகத்தில் சிறுவன் :
இந்நிலையில் சனுஷின் அருமையான பேட்டிங், பவுலிங்கை பார்த்த ஆசிய சாதனை புத்தகம் சார்பாக, ‘மிக இளம்வயது தொழில்முறை கிரிக்கெட் வீரர்’ என்ற விருதை சனுஷுக்கு அளித்துள்ளது.



இப்படி பல விருதுகள், பதக்கங்கள் மிக சிறிய வயதில் வாங்கிவரும் சனுஷ் வருங்காலத்தில் தோனி போன்று சிறந்த கிரிக்கெட் வீரராக வருவார் என தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்