ஆப்நகரம்

Save Delta பேனருடன் சிட்னி மைதானத்தில் திரண்ட தமிழர்கள்

டெல்டா விவசாயிகளை காப்பாற்றுங்கள் என்ற பதாகையுடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்டை பார்க்க இந்திய ரசிகர்கள் பலர் வந்திருந்தனர்.

Samayam Tamil 25 Nov 2018, 7:24 pm
சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியின் போது டெல்டா விவசாயிகளை காப்பாற்றுங்கள் என சில தமிழர்கள் பதாகைகளுடன் வந்திருந்தனர்,
Samayam Tamil save delta


ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் இரண்டு டி20 போட்டி முடிவில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை இருந்தது.

இன்று 3வது டி20 போட்டி சிட்னியில் நடைப்பெற்று வருகின்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழந்து 164 ரன்களை குவித்துள்ளது.
165 ரன் இலக்கை விரட்டிய இந்தியாவுக்கு சிகர் தவான் 41, விராட் கோலி 61 ரன்கள் எடுக்க 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது.

Save Delta பதாகை:
இந்த போட்டியை காண வந்திருந்த ரசிகர்களில் சில தமிழ் ரசிகர்கள் “Save Delta, Save Tamil Nadu Farmers, Gaja Cyclone Relief” என எழுதப்பட்ட பதாகையை காட்டிக் கொண்டிருந்தனர்.


முன்னதாக ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நாடு முழுவதும் மட்டுமல்லாமல், பல வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் ஜல்லிக்கட்டு குறித்த பதாகையுடன் புகைப்படம் வெளியிட்டிருந்தனர்.

மேலும் படிக்க : வெற்றியால் கண்டுகொள்ளப்படாத இந்தியாவின் மட்டமான பீல்டிங்!

தொண்டை பத்திரம்! : இந்திய வீரர்களை எச்சரிக்கும் ஆஸ்திரேலியா வீரர்



தற்போது கஜா புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் முழுமையாக சிதைந்துள்ள நிலையில், மக்களின் கவனம் டெல்டா மாவட்டம் மீது விழ வேண்டும் என்ற நோக்கில் சிட்னி மைதானத்தில் இந்த பதாகையுடன் சிலர் வந்திருந்தனர்.





அடுத்த செய்தி

டிரெண்டிங்