ஆப்நகரம்

இதெல்லாம் செஞ்சா இந்தியா இடத்தை இவங்க பிடிக்கலாம்!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின், இந்தியன் அணியின் இடத்தை இலங்கை, பாகிஸ்தான் அணி பிடிக்க, இன்றைய போட்டியில் இந்த விஷயங்கள் நடந்தால் மட்டுமே முடியும்.

TOI Sports 12 Jun 2017, 3:49 pm
கார்டிப்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின், இந்தியன் அணியின் இடத்தை இலங்கை, பாகிஸ்தான் அணி பிடிக்க, இன்றைய போட்டியில் இந்த விஷயங்கள் நடந்தால் மட்டுமே முடியும்.
Samayam Tamil scenarios to better inds nrr and face bdesh in sf
இதெல்லாம் செஞ்சா இந்தியா இடத்தை இவங்க பிடிக்கலாம்!


இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.

கார்டிப்பில் நடக்கும் 12வது லீக் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு செல்லும், தோல்வியடையும் அணி வீட்டுக்கு கிளம்பும்.

இதில் ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ப்ராஜ் முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இந்த போட்டியில், இரு அணிகளும் ‘பி’ பிரிவில் இந்திய அணியின் முதல் இடத்தை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. அதற்கான சில தகவல்கள்:

பாகிஸ்தான் அணி:
இந்த பிரிவில் பாகிஸ்தான் அணி முதலிடத்தை பிடிக்க,

* இலக்கு 350 ரன்கள் என்றால், 15 ஓவர்களில் எட்ட வேண்டும்.

* இலக்கு 300 ரன்கள் என்றால், 13 ஓவர்களில் எட்ட வேண்டும்.

* இலக்கு 250 ரன்கள் என்றால், 10.4 ஓவர்களில் எட்ட வேண்டும்.

* இலக்கு 200 ரன்கள் என்றால், 8.1 ஓவர்களில் எட்ட வேண்டும்.


இலங்கை அணி:
இந்த பிரிவில் இலங்கை அணி முதலிடத்தை பிடிக்க,

* 300 ரன்களுக்கு மேல் எடுத்து பாகிஸ்தானை 6 ரன்களுக்கு ‘ஆல் அவுட்டாக்க வேண்டும். அதாவது 294 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

* 350 ரன்களுக்கு மேல் எடுத்து பாகிஸ்தானை 57 ரன்களுக்கு ‘ஆல் அவுட்டாக்க வேண்டும். அதாவது 293 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

Scenarios to better Ind's NRR and face B'desh in SF

அடுத்த செய்தி

டிரெண்டிங்