பர்மிங்ஹாம்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் போது, சேவக் தனது வழக்கமான ஸ்டைலால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பையான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் பர்மிங்ஹாமில் நடக்கும் ‘பி’ பிரிவு நான்காவது லீக் போட்டியில், இந்தியா அணி, தனது பரம எதிரியான பாகிஸ்தான் அணியை எதிர் கொள்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பிராஜ் அஹமது , முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 9.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி, 46 ரன்கள் எடுத்த போது, மழை குறுக்கிட்டது. ஆனால், சிறிது நேரத்தில் மழை நிற்க ரசிகர்கள் மீண்டும் உற்சாகமடைந்தனர்.
இந்நிலையில், இப்போட்டியின் ஹிந்தி வர்ணனையாளராக உள்ள, முன்னாள் அதிரடி மன்னன் சேவக், இந்த மழை தாமதம் குறித்து விமர்சிக்கையில்,’ இங்கிலாந்து வானிலையும், மனைவின் மனநிலையும் ஒன்றுதான். எப்போது மாறும் என தெரியாது. அதை புரிந்து கொள்ளவும் முடியாது,’ என நேரலையில் விமர்சித்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பையான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் பர்மிங்ஹாமில் நடக்கும் ‘பி’ பிரிவு நான்காவது லீக் போட்டியில், இந்தியா அணி, தனது பரம எதிரியான பாகிஸ்தான் அணியை எதிர் கொள்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பிராஜ் அஹமது , முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 9.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி, 46 ரன்கள் எடுத்த போது, மழை குறுக்கிட்டது. ஆனால், சிறிது நேரத்தில் மழை நிற்க ரசிகர்கள் மீண்டும் உற்சாகமடைந்தனர்.
இந்நிலையில், இப்போட்டியின் ஹிந்தி வர்ணனையாளராக உள்ள, முன்னாள் அதிரடி மன்னன் சேவக், இந்த மழை தாமதம் குறித்து விமர்சிக்கையில்,’ இங்கிலாந்து வானிலையும், மனைவின் மனநிலையும் ஒன்றுதான். எப்போது மாறும் என தெரியாது. அதை புரிந்து கொள்ளவும் முடியாது,’ என நேரலையில் விமர்சித்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.