ஆப்நகரம்

இந்திய அணியில் யுவராஜ் மீண்டும் இடம்பெறுவார் - சேவாக் நம்பிக்கை

தன் அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்த யுவராஜ் சிங், இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவார் என மற்றொரு அதிரடி வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 20 Jan 2018, 1:03 pm
மும்பை : தன் அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்த யுவராஜ் சிங், இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவார் என மற்றொரு அதிரடி வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil sehwag tips yuvraj to make a strong comeback like nehra
இந்திய அணியில் யுவராஜ் மீண்டும் இடம்பெறுவார் - சேவாக் நம்பிக்கை


யுவராஜ் போன்ற வீரர்கள் மீண்டும் இந்திய அணிக்கு கிடைப்பது மிகவும் அரிதான விஷயம். பல்வேறு போட்டிகளில் மேட்ச் வின்னராக இருந்த யுவராஜ் அணியிலிருந்து நீக்கப்படுவது துரதிஷ்டவசமானது தான்.

36 வயதான ஆஷிஷ் நெஹ்ரா எப்படி இந்திய அணியின் டி20 போட்டியில் இடம்பெற்றாரோ அதே போல், யுவராஜ் இடம்பிடிப்பது நிச்சயம்.

ஐபிஎல் போட்டிக்கான அணி வீரர்கள் ஏலம் எடுக்கும் நிகழ்வு ஜனவரி 27 மற்றும் 28ம் தேதி பெங்களூருவில் நடைப்பெற உள்ளது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் பஞ்சாப் சிங்கங்களான யுவராஜ் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரை எடுக்க முயற்சிப்போம் என அந்த அணியின் ஆலோசகர் சேவாக் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் இடம் பெறாவிட்டாலும் குர்ணால் பாண்டியா மற்றும் தீபக் ஹூடா ஐபிஎல் அணிகளால் அதிக விலைக்கு வாங்க வாய்ப்புள்ளது. அதே போன்று இந்திய அணியில் இடம்பெற்ற வீரர்கள் 10-12 கோடி வரை வாங்க வாய்ப்புள்ளதாக சேவாக் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்