ஆப்நகரம்

இந்த மாதிரி சில விஷயத்தால் தான் டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் உயிரோடு இருக்கு...: கங்குலி!

புதுடெல்லி: ஆஷஸ் போன்ற தரமான டெஸ்ட் தொடர்களால் தான் டெஸ்ட் கிரிக்கெட் இன்னமும் உயிர்புடன் உள்ளதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 19 Aug 2019, 5:47 pm
இங்கிலாந்தில் பாரம்பரிய ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் பரபரப்பாக நடக்கிறது. இதன் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது.
Samayam Tamil Jofra Archer


அனல் பறந்த பதிலடி...:
இதற்கு இரண்டாவது டெஸ்டில் பதிலடி கொடுக்க, இங்கிலாந்து கடுமையான சவால் கொடுத்தது. இருந்தாலும் தட்டுத்தடுமாறிய ஆஸி., அணி ஒருவழியாக டெஸ்ட் போட்டியை ‘டிரா’ செய்தது.

மழை குறுக்கீடு:
லார்ட்ஸில் மழை குறுக்கீடு இருந்த போதும், கடைசி நேரத்தில் போட்டியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி, வரும் 22ம் தேதி லீட்ஸில் துவங்குகிறது.


கங்குலி புகழாரம்:
இதற்கிடையில் ஆஷஸ் தொடர் போன்ற அனல் பறக்கும் போட்டியால் தான், டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் உயிரோடு உள்ளதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சவுரவ் கங்குலி பாராட்டியுள்ளார்.


இதுகுறித்து கங்குலி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘ஆஷஸ் தொடரால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் உயிருடன் உள்ளது. உலகின் மற்ற அணிகளுக்கு தரத்தை உயர்த்த வேண்டிய நேரமிது.’ என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்