ஆப்நகரம்

அடுத்த பொல்லார்ட் இவர்தான்…தமிழக இளம் வீரரைக் கைகாட்டும் சேவாக்!

அடுத்த பொல்லார்ட் இவர்தான் என தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரை கைகாட்டியுள்ளார் விரேந்தர் சேவாக்.

Samayam Tamil 16 May 2021, 7:55 pm
ஐபிஎல் 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானால் எஞ்சிய போட்டிகள் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவில் போட்டிகள் நடைபெற்றாலும் கூட, பல அதிரடி ஆட்டங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. சஞ்சு சாம்சன் (119), ஜோஸ் பட்லர் (124), தேவ்தத் படிக்கல் (101) ஆகிய மூவர் சதமடித்து அசத்தினார்கள். குறிப்பாக, பல இளம் வீரர்கள் இந்த சீசனில் சிறப்பாக விளையாடினர்.
Samayam Tamil விரேந்தர் சேவாக்


இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள விரேந்தர் சேவாக் தமிழக வீரரைப் புகழ்ந்து பேசியுள்ளார். “பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் ஷாருக்கானை பார்க்கும்போது 2010ஆம் ஆண்டு ஐபிஎலில் இளம் வீரராக பொல்லார்ட் களமிறங்கியதுதான் நியாபகத்திற்கு வருகிறது. அப்போது பொல்லார்ட் மீதுதான் அனைவரின் கவனம் இருந்தது. ஏனென்றால், நின்ற இடத்திலிருந்தே அசால்ட்டாக சிக்ஸர் அடிக்கக் கூடியவர் இவர்தான். தமிழகத்தைச் சேர்ந்த ஹாருக்கானுக்கும் அதேபோன்று திறமை உள்ளது. அடுத்த பொல்லார்ட்டாக இவர் இருப்பார்” எனத் தெரிவித்தார்.

“ஷாருக்கான் கடந்த சில போட்டிகளில் ஆட முயன்றார். ஆனால், அவரால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை. காரணம், அவர் மிடில் வரிசைக்கு அடுத்தபடியாக களமிறக்கப்பட்டதுதான்” எனக் கூறினார்.

ஐபிஎல் 14ஆவது சீசின் பஞ்சாப் அணிக்காக 6ஆவது வரிசையில் களமிறங்கிய ஷாருக்கான் 6*, 47, 15*, 22, 13, 0, 4 போன்ற சொற்ப ரன்கள் மட்டுமே அடித்திருந்தார்.

தொடர்ந்து பேசிய சேவாக், ஹாருக்கான் மட்டும் முதல் வரிசையில் களமிறங்கியிருந்தால் நிச்சயம் சதம் விளாசியிருப்பார் எனத் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்