ஆப்நகரம்

ஷாகிப் அல் ஹசனுக்கு இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடத் தடை

ஊழல் குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், ஷாஹிப் அல் ஹசனுக்கு அனைத்துப் பிரிவு கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட ஐ. சி. சி ஈராண்டுகள் தடை விதித்துள்ளது.

Samayam Tamil 30 Oct 2019, 3:39 pm
ஊழல் குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், ஷாஹிப் அல் ஹசனுக்கு அனைத்துப் பிரிவு கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட ஐ. சி. சி ஈராண்டுகள் தடை விதித்துள்ளது.
Samayam Tamil shakib al hasan banned from cricket for two years
ஷாகிப் அல் ஹசனுக்கு இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடத் தடை


வங்க தேச கிரிக்கெட் வீரரும் குறிப்பிடத்தக்க ஆட்டக்காரருமான ஷாஹிப் அல் ஹசன் மீது ஐ சி சி யின் விதிமுறைகளை மீறி ஊழல் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதாவது வங்கதேசம், இலங்கை, ஜிம்பாப்வே விளையாடிய முத்தரப்பு கிரிக்கெட்டின்போதும், அடுத்து நடந்த ஐபிஎல் ஆட்டத்தின் போதும் சூதாட்டக்கார்களுடன் பேச்சு வார்த்தை மேற்கொண்டதாக குற்றசாட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து ஐசிசி யின் ஊழல் தடுப்புப் பிரிவு சார்பில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், குற்றங்களை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து ஐசிசி தற்போது தண்டனை விதித்துள்ளது.

அதாவது, ஓராண்டு சஸ்பெண்ட் உடன் இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது. அதே சமயம் தடைக்காலத்தின் ஒரு பகுதியான சஸ்பெண்ட் கண்டிஷனுக்கு ஒத்துக்கொண்டால், அடுத்த ஆண்டு நடைபெறும் சர்வதேச போட்டிகளில் மீண்டும் விளையாடலாம் என்றும் தெரிவித்துள்ளது.

அதன்படி 2020ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி வரை எல்லா கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட வாய்ப்புள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள ஷாஹீப் அல் ஹசன், “ எனக்கு மிகவு பிடித்தமான கிரிக்கெட் விளையாட்டில் எனக்கு தடை விதித்தது மிகவும் வருத்தமளிக்கு செய்தியாக உள்ளது. ஆனாலும் இந்த ஐசிசியின் முடிவை நான் ஏற்கிறேன் ” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்