ஆப்நகரம்

என் மனைவியிடம் விசாரித்தால் நான் தப்பிச்சிருவேன் - சமி

என் மீது எந்த தவறும் இல்லை, என் மனைவியை நன்றாக விசாரித்தால் அது புரியும் என கிரிக்கெட் வீரர் முகமது சமி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 11 Mar 2018, 10:30 am
என் மீது எந்த தவறும் இல்லை, என் மனைவியை நன்றாக விசாரித்தால் அது புரியும் என கிரிக்கெட் வீரர் முகமது சமி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil shami demands thorough investigation into wifes allegation
என் மனைவியிடம் விசாரித்தால் நான் தப்பிச்சிருவேன் - சமி


கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமி மீது அவரது மனைவி போலீஸில் புகார் அளித்தார். அதில் சமி, அவரது சகோதரர், உறவினர்கள் என அனைவரௌம் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், கொலை முயற்சி செயததாகவும் புகார் தெரிவித்திருந்தார். அதோடு சமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக் கூறியிருந்தார்.

இப்படி சமி மனைவியின் புகாரால் பிரச்னையில் இருந்து வருவதால் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக விளையாடுவாரா என்பது சந்தேகமே.
அதனால் டெல்லி அணி சமியை விளையாட விடலாமா?, வேண்டாமா? என மறுபரிசீலனை செய்து வருகின்றது.

மேலும் படிக்க : பிசிசிஐ.,யை தொடர்ந்து ஐபிஎல் போட்டியிலும் சமிக்கு ஆப்பு!

இந்நிலையில் என் மனைவியிடம் போலீஸ் உரிய முறையில் விசாரிக்க வேண்டும். அதன் பின்னரே என்னை கிரிக்கெட் போட்டிகளில் சேர்க்கலாமா? வேண்டாமா என பிசிசிஐ தீர்மானிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்