ஆப்நகரம்

தோனிக்கு லேட்டாக வாழ்த்து சொன்ன சேவாக்! அதற்கு அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா?

தோனிக்கு லேட்டாக வாழ்த்து சொன்ன சேவாக்! அதற்கு அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா?

TOI Contributor 8 Jan 2017, 1:08 am
இந்திய அணியின் நட்சத்திர கேப்டனான மகேந்திர சிங் தோனி ஏற்கனவே டெஸ்ட் போட்டிக்கு ஓய்வு அறிவித்த நிலையில், கோலி தலைமையில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக தோனி அறிவித்துள்ளார். இதற்கு பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் மூன்று நாட்களுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil shewag revealed why he wishing dhoni after three days
தோனிக்கு லேட்டாக வாழ்த்து சொன்ன சேவாக்! அதற்கு அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா?


இது குறித்து விளக்கம் அளித்துள்ள சேவாக், கடந்த 4ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகினார். இந்த ஓய்வு நான் எதிர்பார்த்ததை விட விரைவாகவே நடந்துள்ளது. அவருடைய எண் 7. ராசியான எண் 7 என்பதால் அவருடைய எதிர்காலம் சிறப்பாக அமைய 7ஆம் தேதி வாழ்த்துவது சரியாக இருக்கும் என்று சேவாக் கூறியுள்ளார். அதனால் தான் மூன்று நாட்கள் காத்திருந்து 7ஆம் தேதி வாழ்த்தியதாக கூறியுள்ளார். மேலும் எதிர்காலத்தில் அவர் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றிபெற வாழ்த்துகள் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் யுவராஜ் சிங், கவுதம் காம்பிர் இதுவரை வாழ்த்து ஏதும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


It's 7th and here is my tribute to @msdhoni after he stepped down from limited overs captaincy.https://t.co/Ex9K8jZyaD — Virender Sehwag (@virendersehwag) January 7, 2017

அடுத்த செய்தி

டிரெண்டிங்