ஆப்நகரம்

அம்பயர் கண்ணில் மண்ணைத் தூவிய குர்னால் பாண்டியா!

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், ஷிகர் தவானுக்கு கேட்ச் பிடித்ததாக மும்பை வீரர் குர்னால் பாண்டியா ஏமாற்றினார்.

TOI Sports 12 Apr 2017, 9:01 pm
மும்பை: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், ஷிகர் தவானுக்கு கேட்ச் பிடித்ததாக மும்பை வீரர் குர்னால் பாண்டியா ஏமாற்றினார்.
Samayam Tamil shikar dhawan gets one lucky life
அம்பயர் கண்ணில் மண்ணைத் தூவிய குர்னால் பாண்டியா!


இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) நடப்பது வழக்கம். இந்த ஆண்டு பத்தாவது தொடர் துவங்கி நடந்து வருகிறது. இதன் மும்பையில் 10வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

இதில் ’டாஸ்’ வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இதில், ஐதராபாத் அணியில் பிபுல் சர்மாவுக்கு பதில் விஜய் சங்கர் அறிமுக வாய்ப்பு பெற்றார். இதே போல முஷ்பிகுர் ரஹீம் மீண்டும் அணிக்கு திரும்பினார்.

இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு, மும்பை வீரர் ஹர்திக் பாண்டியா வீசிய போட்டியின் 8வது ஓவரின் 3வது பந்தை ஷிகர் தவான் தூக்கி அடிக்க, அதை அவரது சகோதரர் குர்னால் பாண்டியா, பாய்ந்து பிடிக்கும் முயற்சியில் பந்து தரையில் பட்டது.

ஆனால் இதை குர்னால் புத்திசாலித்தனமாக மறைக்க, சுதாரிக்க அம்பயர்கள் டி-வி அம்பயரிடம் கொண்டு சென்றனர். இதை பல முறை ரீபிளேவில் பார்த்த போதும் தெளிவான முடிவுக்கு வர முடியாத காரணத்தினால், சந்தேகத்தின் அடிப்படையிலும், களத்தில் இருந்த அம்பயர்களின் முடிவு படியும் ‘நாட்- அவுட்’ வழங்கினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்