ஆப்நகரம்

ஒருதடவை தானே... இந்த சின்ன பசங்க என்ன பண்ணுவாங்க - தவான் ஆறுதல்

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போடியில் சஹால், குல்தீப் யாதவ் ரன்களை வாரி வழங்கியதால் தோல்வியடைந்ததாக கூறுவது ஏற்க முடியாது என தவான் இளம் வீரர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

Samayam Tamil 11 Feb 2018, 9:43 pm
ஜோகனஸ்பெர்க் : தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போடியில் சஹால், குல்தீப் யாதவ் ரன்களை வாரி வழங்கியதால் தோல்வியடைந்ததாக கூறுவது ஏற்க முடியாது என தவான் இளம் வீரர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
Samayam Tamil shikhar dhawan backs chahal kuldeep to come back stronger
ஒருதடவை தானே... இந்த சின்ன பசங்க என்ன பண்ணுவாங்க - தவான் ஆறுதல்


தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. டெஸ்ட் தொடரை 2-1 என இழந்தாலும், ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் வெற்றி பெற்று 3-0 என வென்று முன்னிலை பெற்றிருந்தது.

நேற்று நடந்த 4வது போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை காரணமாக போட்டியில் மாற்றம் ஏற்பட்டது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய தென் ஆப்ரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

ரன்களை வாரி வழங்கிய ஸ்பின்னர்ஸ் :

இந்த தொடரில் சஹால் + குல்தீப் வழங்கிய ரன்கள் :
முதல் ஒருநாள் : 20-0-79-5 (ரன் சராசரி 3.95)
2வது ஒருநாள் : 14.2-1-42-8 (2.93)
3வது ஒருநாள் : 18-1-69-8 (3.83)
4வது ஒருநாள் : 11.3-0-119-3 (10.53)

முதல் 3 போட்டிகளில் மிக குறைந்த அளவு ரன்களை விட்டுக்கொடுத்து அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். இந்நிலையில் 4வது ஒருநாள் போட்டியில் வெறும் 11.3 ஓவரில் 119 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றினர்.

இவர்களின் ஓவர்களில் தென் ஆப்ரிக்க வீரர்கள் சிக்ஸர், பவுண்டரி என பறக்க விட்டதால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.

தவான் ஆறுதல் :
3 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட சஹால், குல்தீப் ஒரு போட்டியில் தான் அதிக ரன்கள் விட்டுகொடுத்துள்ளனர். போட்டியில் இதெல்லாம் சகஜம். இளம் வீரர்களை ஊக்கப்படுத்துவது தான் சீனியர் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடமையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்